அமெரிக்காவில் உள்ள பல்வேறு மாநிலங்களை புயல் தாக்கியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவில் தற்போது கனமழை காரணமாக அங்குள்ள பல்வேறு மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அலபாமா, மிசிசிபி, லூசியானா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் இந்த புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பலத்த மழையின் காரணமாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் மின் வினியோகம் இன்றி இருளில் மூழ்கின. மிசிசிபி மாகாணத்தில், லிங்கன் கவுண்டி என்ற இடத்தில் மரம் வேரோடு சாய்ந்து 63 வயதான முதியவர் உயிரிழந்தார். மேலும் […]
