நியூயார்க் நகரில் ஒரு பெண் கொரோனா பிடியால் கோமா நிலைக்கு போய் அதிலிருந்து மீண்டு தான் பெற்றெடுத்த குழந்தையை முதல் முறையாகச் சந்தித்து கொஞ்சும் நிகழ்வு நெஞ்சை நெகிழச் செய்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா அதிவேகமாக பரவி வருகின்றது. அந்நாட்டின் நியூயார்க் நகரின் லாங் தீவை சேர்ந்த யானிரா சோரியானோ என்ற நிறைமாத கர்ப்பிணிப்பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று வாரத்துக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிசேரியன் மூலம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.. ஆனால் […]
