ஊரடங்கின் விதிமுறைகளை மீறி யானை மீது மணமகனை அழைத்து செல்லும் வீடியோ வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருக்கும், இளம் பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சிக்கு இரு குடும்பத்தினரின் உறவினர்கள் 500-க்கும் மேற்பட்டோர் அங்கு சென்றுள்ளனர். இந்நிலையில் செண்டை மேளம் முழங்க யானை மீது மணமகனை அமர வைத்து ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். இந்த காட்சியை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் […]
