தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற பெரிய கோவில் அமைந்துள்ளது. இதனை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் சதய விழா கோவில் வளாகத்தில் 2 நாட்கள் நடைபெற உள்ளது. வருகிற 2- ஆம் தேதி மங்கள இசையுடன் விழா தொடங்கி கருத்தரங்கம், கவியரங்கம் நடைபெற்று, 3- ஆம் தேதி பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம், ராஜராஜசோழனின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வருகிற 3- ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட […]
