மதுவை வீட்டிற்கே விநியோகம் செய்வது தொடர்பாக பரிசீலிக்க மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தளர்த்தியதன் காரணமாக அனைத்து மாநிலங்களும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியது. தற்போது தமிழகம், ஆந்திரா, கேரளா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சமூக இடைவெளி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் […]
