நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 43 அகதிகள் பலியான சம்பவம் லிபியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லிபியா நாட்டின் தலைநகரான திரிபோலியின் மேற்கு கடற்கரையில் ஷவையா நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் இருந்து அதிக எண்ணிக்கையிலான அகதிகள் ஒரு படகில் ஏறிச் சென்றுள்ளனர். படகு நடுக்கடலில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று என்ஜின் பழுதாகியதால் நிலைதடுமாறிய படகு கவிழ்ந்தது. இதில் பயணித்த அகதிகள் கடலில் விழுந்தனர். எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்தால் 43 அகதிகள் தண்ணீருக்குள் முழ்கி பரிதாபமாக […]
