பவானிசாகர் அருகே கிராமத்துக்குள் சிறுத்தை புகுந்து ஆடு ஒன்றை தூக்கிச் சென்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பவானிசாகர் பகுதியை அடுத்த புதுக்கீனுர் கிராமம் வனப்பகுதியை ஒட்டி காணப்படும். இந்த கிராமத்திற்கு சென்ற மாதம் சிறுத்தை ஒன்று புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. மேலும் கால்நடைகளை தாக்கி வேட்டையாடியும் வந்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டனர். இந்நிலையில் மீண்டும் அதே சிறுத்தை வனப்பகுதிக்குள் இருந்து தப்பி கிராமத்திற்குள் மீண்டும் புகுந்தது. […]
