சிறுத்தை நாயை கவ்வி சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூசைபுரம், பீம்ராஜ் நகர், மல்குத்திபுரம் போன்ற கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் இருக்கும் கல்குவாரியில் பதுங்கியிருக்கும் சிறுத்தை கால்நடைகளை வேட்டையாடி கொண்டிருக்கிறது. இதுவரை இந்த சிறுத்தை அப்பகுதியில் இருக்கும் 20-க்கும் மேற்பட்ட நாய்கள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட ஆடுகளை வேட்டையாடியுள்ளது. இந்த சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். ஆனாலும் சிறுத்தை அதில் சிக்கவில்லை. இந்நிலையில் சூசைபுரம் கிராமத்தில் […]
