சிறிதளவு இஞ்சியை வாயில் இட்டு மென்று உமிழ்நீரை துப்பு விடாமல் குரல்வளை மூலம் உள்ளுக்குள் சாப்பிட்டால் தொண்டைப் புண் குணமாகும். தேங்காய்ப்பால் மணத்தக்காளி சாறு இவற்றை சம அளவு கலந்து 50 முதல் 100 மில்லி குடித்து வரலாம். தேங்காய் பாலில் மாசிக்காய் அல்லது வசம்புத் துண்டை ஊறவைத்து சாப்பிட்டால் தொண்டைப்புண் குணமாகும். இஞ்சியுடன் 4 கிராம்பு சேர்த்து விழுதாக அரைத்து சிறிது சூடாக்கி தொண்டையில் மேல் பூசி வரவும் இவ்வாறு செய்தால் தொண்டைப் புண் குணமாகும். […]
