அம்மன் சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழத்தை ஒருவர் 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள பச்சாபாளையம் பகுதியில் மகாமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 25-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் இந்த கோவிலில் பொங்கல் திருவிழா தொடங்கியது. அதன்பின் கடந்த 3-ஆம் தேதி தீர்த்த குடம், பால் குடம், ஆறுமுகக் காவடி, வேல் மற்றும் அக்னி கும்பம் எடுத்து வந்து பக்தர்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளனர். கடந்த 4-ஆம் தேதி […]
