மனித செல்லை விலங்குகளில் செலுத்தி மனிதன் பாதி மிருகம் பாதி என்ற வகையில் புதிய உயிரினத்தை உருவாக்க ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். விண்வெளி ஆய்வு போன்றவற்றிற்கு பயன்படுத்தும் நோக்கில் மனிதன் சிம்பான்சி கலப்பினத்தை உருவாக்கும் முயற்சிகள் சோவியத் இரஷ்யாவில் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.மேலும், சீனாவிலும் கூட இத்தகைய ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இயற்கையோடு விபரீதமாக விளையாடும் முயற்சி என்ற வகையில் மனித விலங்கு கலப்பின கரு ஆய்வு என்பது சர்ச்சைக்குரிய ஆய்வுகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது. […]
