வனப்பகுதிக்குள் வினோத செடி உரசியதால் வழிதவறி சென்ற பெண்ணை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியில் சந்திரா என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் தேயிலை பறிக்கும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சந்திரா விறகு எடுப்பதற்காக ஊசிமலை வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியுமாகியும் சந்திரா திரும்பி வராததால் வனத்துறையினர் அவரை தேடி பார்த்து உள்ளனர். அப்போது இருள் சூழ்ந்து விட்டதால் வனத்துறையினர் தேடும் பணியை கைவிட்டு […]
