தனக்கு புற்றுநோய் இருப்பதாக சமூகவலைதளங்களில் புகைப்படத்தை பதிவிட்டு பொதுமக்களிடம் ஒரு பெண் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனிலுள்ள கெண்ட் என்னும் பகுதியில் நிக்கோல் எல்காப்ஸ் என்ற 42 வயது பெண்மணி வசித்து வருகிறார். இவர் சமூக வளைதளத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது போன்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் தான் புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதாகவும், அதில் இருந்து மீண்டு வர அதிக பணம் தேவைப்படுவதால் தனக்கு உதவி செய்யுமாறும் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார். […]
