சாராயம் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகில் சந்தேகப்படும்படியான நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அந்த பெண் அதே பகுதியில் வசிக்கும் கஸ்தூரி என்பதும், சட்டவிரோதமாக அவர் சாராயம் விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கஸ்தூரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
