மத்திய அரசிற்கு சொந்தமான படைக்கலன் தொழிற்சாலைகளை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கூறி 3 நாட்களாக ஆலை ஊழியர்கள் வேலைநிறுத்தம் நீடிக்கிறது. மத்திய அரசிற்கு சொந்தமான படைக்கலன் தொழிற்சாலைகளை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடக்கோரி நாடு முழுவதும் இருக்கக்கூடிய 41 படைக்கலன் தொழிற்சாலைகளில் பணியாற்றும் சுமார் 60 ஆயிரம் தொழிலாளர்கள் தற்பொழுது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி திருவெறும்பூரில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையை சேர்ந்த ஊழியர்கள் ஆலைக்கு வெளியே குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் […]
