குழம்பு பாத்திரத்தில் விழுந்து பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள தாழநல்லூர் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு திருமணமாகி தனலட்சுமி என்ற மனைவியும், கிரிஷ் என்ற மகனும் மற்றும் கிருபாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் மனைவியிடம் மணிகண்டன் மதிய உணவு சமைக்குமாறு கூறி விட்டு வயலுக்கு சென்றுள்ளார். இதில் சமையலை முடித்துவிட்டு சாம்பாரை பெரிய பாத்திரத்தில் ஊற்றி சமையலறையில் தனலட்சுமி வைத்திருந்திருக்கிறார். அப்போது வீட்டில் […]
