காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரியில் இருக்கும் கலைஞர் காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அதிக விலைக்கு தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சூளகிரி -பேரிகை சாலையில் இருக்கும் பெட்ரோல் நிலையம் அருகில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த […]
