ஓசூர் அடுத்து யூ.புரம் கிராமத்தில் கஞ்சா விற்றுவந்த இருவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலம் பகுதியில் மாணவர்களைக் குறிவைத்து தடைசெய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை சிலர் விற்பனை செய்துவந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள், உதவி காவல் ஆய்வாளர் செல்வராகவனிடம் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், கெலமங்கலம் காவல் துறையினர் யூ.புரம் கிராம பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கிராமத்துக்கு ஒதுக்குப்புறமாக சிறு சிறு பிளாஸ்டிக் கவர்களில் கஞ்சாவை நிரப்பி […]
