கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க சிஎம்டிஏ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னை உட்பட 26 மாவட்டங்களில் கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. சுமார் 2000 கணக்கானோருக்கு கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, திருமழிசையில் தற்காலி சந்தை அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகின்றது. […]
