ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை மலேசியாவில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மலேசியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததால் ஜூன் 7 ஆம் தேதி வரை பகுதி அளவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8000ஐ கடந்துள்ளது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு வரும் ஜூன் மாதம் 1 முதல் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மலேசியா பிரதமர் முகாயிதின் யாசின் தெரிவித்துள்ளார். […]
