கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளி தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் தெருக்களில் சுற்றித் திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புதுப்பட்டினம் கிராமத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒருவர் வீட்டில் தன்னை தனிமைபடுத்தி சிகிச்சை பெற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளார். ஆனால் அந்த நபர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் தெருக்களில் சுற்றித் திரிவதாகவும் அதனால் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் புதுப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் […]
