ஆஸ்திரேலிய காட்டு தீயில் இருந்து மீட்கப்பட்டு மீண்டும் அதன் வாழ்விடத்தில் விடப்பட்ட போது, அதனை கண்டு கோலா கரடிகள் திகைத்து போன நிகழ்வு பார்ப்பதற்க்கே பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ கோர தாண்டவம் ஆடிவருகிறது. இதில், பல மில்லியன் ஹெக்டேர் நிலங்கள், நூற்றுக்கணக்கான வீடுகள் எரிந்து சாம்பல் ஆகின. அதுமட்டுமின்றி கோலா கரடிகள் உட்பட பல விலங்குகளின் உயிரையும் காட்டுத் தீ பறித்துள்ளது. காட்டு தீயால் கடுமையாக பாதிக்கப்பட்ட அடிலெய்டில் […]
