கீழ்ப்பாக்கம் அருகே வீட்டு லாக்கரில் வைத்திருந்த நகை மர்மமான முறையில் திருடுபோனது குறித்து காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணிஷ்காரணி. இவர் கடந்த 24ஆம் தேதி பிரபல நகை கடையிலிருந்து சுமார் 3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை வாங்கியுள்ளார். இந்த நகைகளை தனது தாயாரிடம் கொடுத்து வீட்டு படுக்கையறையிலுள்ள லாக்கரில் வைக்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி லாக்கரில் இருக்கும் நகைகளைப் பார்க்க தாயாரிடம் கேட்டுள்ளார். அப்போது நகையை […]
