ஆந்திராவில் இருந்து அரசு பேருந்தில் 10 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து விட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடி இயங்கி வருகிறது. அங்கு கவரைபேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை மாவட்டத்தை நோக்கி ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து வந்த தமிழக அரசு பேருந்தை போலீசார் நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அந்த சமயம் பேருந்தில் […]
