தினமும் குடித்துவிட்டு தாயை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்த தந்தையை மகனே கழுத்தை நெறித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவரது மகன் அஜித் அசோக் (21) கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அருகிலுள்ள பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இந்தநிலையில், கோவிந்தராஜ் குடித்துவிட்டு தினமும் தனது மனைவியையும், மகனையும் அடித்து துன்புறுத்தி கொடுமைபடுத்தி வந்துள்ளார். தற்போது கொரோனா பொதுமுடக்கத்தால் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் கோவிந்தராஜ், வழக்கம்போல் நேற்றும் குடித்து விட்டு […]
