குழந்தையை கடத்திய குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் சாலையோரம் குடிசை அமைத்து ஆனந்த்-நாகம்மாள் தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இத்தம்பதியினருக்கு முகம்மது சுலைமான் என்ற 11 மாத ஆண் குழந்தை உள்ளான். அந்த குழந்தை திடீரென மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்த தம்பதியினர், பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சில மர்ம நபர்கள் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. அதன்பின் கடத்தப்பட்ட […]
