கர்நாடகாவில், அனைத்து பள்ளிகளிலும் ‘குடிநீர் பெல்‘ முறையை செயல்படுத்த அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. கர்நாடக மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகள் தேவையான அளவு குடிநீரை பருகுவதில்லை என்றும், அதன் காரணமாக உடல் ரீதியில் சில பாதிப்புகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாற்றுகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. இந்நிலையில் கேரளாவில், குடிநீர் குடிப்பதற்காகவே காலை மற்றும்மதியம் 2 முறை ‘குடிநீர் பெல்‘ நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதே போல கர்நாடகாவிலும் அமல்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை […]
