தங்க சங்கிலியை பறிப்பதற்காக ஒரு பெண்ணை முன்னாள் ராணுவ வீரர் குளத்தில் தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேக்காமண்டபம் புனத்து விளை பகுதியில் வின்சென்ட் என்பவர் வசித்துவருகிறார். இவர் கேரளாவில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மேரி ஜெயா அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மேரி முளகு மூடு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு […]
