தாய் இறந்த துக்கத்தில் மகள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலங்கோடு பகுதியில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியரான வேலம்மாள்(78) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பகவதி அம்மாள்(57) என்ற மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் உடல் நல குறைவு காரணமாக வேலம்மாள் உயிரிழந்து விட்டார். நேற்று மதியம் அவரது இறுதி சடங்கு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் தாயின் உடல் அருகே அமர்ந்து அழுது […]
