துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் உடற்கூறாய்வின்போது ஆறு இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது தற்போது தெரியவந்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் நேற்று இரவு துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த உதவி ஆய்வாளர் வில்சனின் உடல், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. உதவி ஆய்வாளருக்கு ஏற்கெனவே மார்பு, வயிறு, தொடை ஆகிய மூன்று இடங்களில் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்த நிலையில், இடுப்பில் ஆழமான கத்திகுத்து காயம் இருந்தது உடற்கூறாய்வில் கண்டறியப்பட்டது. […]
