Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த தாய்…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தாய் கண்டித்ததால் மனமுடைந்த மகள் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நாவலூர் கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வைத்தீஸ்வரி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது அக்கா சூர்யாவிற்கு வாங்கி வந்த புது ஆடையை வைத்தீஸ்வரி அணிந்துள்ளார். இதனால் அவரது தாய் கங்காதேவி அவரை கண்டித்ததால் மனமுடைந்த வைத்தீஸ்வரி விஷம் குடித்துள்ளார். இதனை அடுத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு மறுத்த காதலி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருமணம் செய்ய காதலி மறுத்ததால் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரட்டகரம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரும்பு வெட்டும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடன் வேலை பார்க்கும் அதே ஊரில் வசிக்கும் 22 வயது பெண்ணை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். அப்போது கடந்த 15 நாட்களுக்கு முன்பாக மணிகண்டன் கரும்பு வெட்டும் பணிக்காக மைசூருக்கு சென்றுள்ளார். அந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் செய்ய வேண்டும்…. காத்திருப்பு போராட்டம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக அனைத்து மாற்றுத்திறனாளிகளும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் சாந்தி தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் துணை தலைவர்களான கார்த்தி மற்றும் துணைச்செயலாளர் அஞ்சலி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். பின்னர் ஆறுமுகம் மற்றும் மாவட்ட முன்னாள் தலைவர் சுப்பிரமணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசியுள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பாலத்தில் நின்ற இளம்பெண்…. வசமாக சிக்கிய 3 வாலிபர்கள்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

18 வயது இளம்பெண்ணை கட்டாயத் திருமணம் செய்வதாக கூறி அழைத்து சென்ற 3 வாலிபர்களை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் 18 வயதுடைய இளம்பெண்ணை அதே பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவர் கடத்தி சென்று ஆசை வார்த்தை கூறி கட்டாய திருமணம் செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாலிபர் மற்றும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போலி ஆவணம் தயாரிப்பு…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விவசாயியான இவர் தன்னுடைய தாத்தா பெரிய கவுண்டர் மற்றும் பாட்டி அத்தாயி ஆகியோருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து உரிமை கொண்டாடி வந்துள்ளார். அதன்பின் கடந்த 2010-ஆம் ஆண்டு மோகன் அத்தை சுந்தரம்மாள் தந்தை பெரிய கவுண்டர், […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிலத்தகராறு காரணமாக முன்விரோதம்…. சரமாரியாக தாக்கிய குடும்பத்தினர்…. போலீஸ் நடவடிக்கை….!!

நிலத்தகராறு காலத்தில் 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரங்கநாதபுரம் கிராமத்தில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான சின்னதுரை மற்றும் காந்தி ஆகியோருக்கு இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த தேவேந்திரன் அவரது மனைவி அய்யம்மாள், மகன்கள் மணிகண்டன், ராமசாமி ஆகியோர் சேர்ந்து சின்னதுரை மற்றும் காந்தி ஆகியோரை சரமாரியாக தாக்கியதாக தெரியவந்துள்ளது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 25 லிட்டர்…. வசமாக சிக்கிய 2 பேர்….போலீஸ் நடவடிக்கை….!!

வெவ்வேறு பகுதிகளில் சாராய விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் காவல்துறையினர் அரசராம்பட்டு மற்றும் பாவளம் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாவளம் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்த சஞ்சீவ் காந்தி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின் அவரிடம் இருந்த 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து காட்டுக்கொட்டாய் பகுதியில் சாராயம் விற்பனை செய்த நாகமணி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து அவரிடம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாராயம் விற்பனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சாராயம் விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரகண்டநல்லூர் காவல்துறையினர் கோட்டை மருதூர் கிராமத்தில் இருக்கும் கொடுக்கப்பட்டு ஏரிக்கரையில் சாராய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த கோட்ட மருதூர் கிராமத்தில் வசிக்கும் குமாரசாமி மற்றும் அவரின் மகன் சந்திரசேகர் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து அவர்களிடம் இருந்த 60 லிட்டர் சாராயம் மற்றும் 400 லிட்டர் சாராய ஊறல்களை காவல்துறையினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாராயம் விற்பனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த ஒருவரை தனிப்படை காவல்துறையினர் டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் நகர் பகுதியில் சாராயம் விற்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் வினோத் என்பவர் தனது வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட கோவில் கதவு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

அம்மன் கழுத்தில் இருந்த தாலியை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகாமையில் இருக்கும் நகரில் அய்யனார் பச்சைவாழி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க தாலியை திருடிச் சென்றுள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அம்மனின் தங்க தாலியை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இந்த வருடமும் கிடையாது…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை…. ஆட்டோவில் உலாவரும் போலீஸ்….!!

பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அரசு தடை விதித்ததால் ஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் பொதுமக்களை எச்சரிக்கை செய்து வருகின்றனர். தமிழகத்தில் இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயக சதுர்த்தி மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கமாக இருக்கிறது. இந்த விழாவில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு பின் அவற்றை நீர்நிலைகளில் கரைத்து விடுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கு அரசால் தடை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற வாலிபர்கள்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது சுழலில் சிக்கி 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லூர் வீரமடை கிராமத்தில் இருக்கும் தென்னம் பண்ணை ஆற்றங்கரையின் ஓரத்தில் அமைந்திருக்கும் அய்யனார் கோவிலுக்கு பக்தபூர் தெருவில் வசிக்கும் செந்தில் மற்றும் சேதுராமன் ஆகிய இருவரும் தங்களின் குடும்பத்தினருடன் வந்துள்ளனர். அப்போது பெண்கள் மற்றும் பெரியவர்கள் சாமியை வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை செய்து செய்து கொண்டிருக்கும் போது செந்தில் மகனான ஆகாஷ் மற்றும் சேதுராமன் மகன் அபினாஷ் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உரிய அனுமதி வாங்கவில்லை…. 36 நபர்களின் மீது வழக்கு…. போலீஸ் நடவடிக்கை….!!

அனுமதியின்றி கோவில் தேர் திருவிழாவை நடத்திய 36 நபர்களின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆரூர் கிராமத்தில் இருக்கும் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் ஊர் மக்கள் சார்பாக 10 லட்சம் மதிப்பில் புதிதாக தேர் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் தேரோட்டம் திருவிழா தற்போது நடைபெற்றுள்ளது. இதன் முன்பாக மங்கள வாத்தியம் இசைக்க வாழைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் மக்களுக்கு காட்சி அளித்துள்ளார். அதன் பிறகு ஊர் மக்கள் அனைவரும் வடம்பிடித்து தேரை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதற்கும் மானியம் வழங்குகிறோம்…. ஆர்வம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்…. மாவட்ட கலெக்டர் தகவல்….!!

மீன் குஞ்சு வளர்ப்பு குளம் அமைக்க மானியம் வழங்கபடுவதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 2021-2022-ன் கீழாக மீன் குஞ்சு உற்பத்தி அதிகரிக்க அதற்கான வளர்ப்புக் குளம் அமைக்க மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற மீன் வளர்ப்பில் ஆர்வம் இருக்கும் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இதில் ஒரு ஹெக்டரில் 6 லட்சம் ரூபாய் செலவு செய்து மீன் குஞ்சு வளர்ப்புக் குளம் அமைத்திட 5 […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பொருள்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

புகையிலை பாக்கெட்டுகளை ஆட்டோவில் கடத்தி வந்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் காவல் துறையினர் செவலை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்த போது அதில் 4 மூட்டைகளில் 1,௦௦,௦௦௦ மதிப்புடைய அரசால் தடை செய்யப்பட்ட 1௦௦௦  புகையிலை பாக்கெட்டுகள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அவர்களை விசாரணை செய்த போது புகையிலை பாக்கெட்டுகளை பெங்களூருவில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. பின்னர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பணம் வைத்து சூதாட்டம்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

பணம் வைத்து சூதாடிய வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை சுற்றியிருக்கும் பகுதிகளில் பணம் வைத்து சூதாட்டம் ஆடுபவர்களை கைது செய்ய மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி குன்னத்தூர் கிராமத்தில் பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக மணிகண்டன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டு வரும் புண்ணியமூர்த்தி மற்றும் கனகசபை ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

2 மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் தனது நிலத்தில் விளைந்த பூக்களை பறித்துக் கொண்டு அதை விற்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற போது அவரின் எதிரில் சரவணகார்த்திகேயன் மற்றும் அமர்நாத் ஆகியோர் தங்களின் மோட்டார் சைக்கிளில் கூகையூர்  நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது கிராமத்தின் எல்லையில் வந்து கொண்டிருக்கும் போது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 450 லிட்டர்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

480 லிட்டர் சாராயத்தை காரில் கடத்தி சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு உத்தரவின் படி மதுவிலக்கு துணை காவல்துறை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் தனிப்படையினர் சேராப்பட்டு, வெள்ளிமலை மலைப்பகுதிகளில் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சீவாத்து மூலை பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார் போன்றவைகளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதில் காரில் 60 லிட்டர் கொள்ளளவுடைய […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற மாணவன்…. திடிரென நடந்த சம்பவம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

9 வயதுடைய மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாகித் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் விளையாட சென்ற சாகித் மாலை நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அச்சமடைந்த சாகித்தின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இந்த பயிர்களுக்கும் உண்டா…? காப்பீடு கட்டணம் நிர்ணயம்…. மாவட்ட கலெக்டரின் தகவல்….!!

வெங்காயம், வாழை, மஞ்சள் மற்றும் மரவள்ளி கிழங்கு ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்புப் பருவத்தில் பயிரிடப்பட்டிருக்கும் வெங்காய பயிர்களுக்கு வருகிற 11-ஆம் தேதி வரையிலும், வாழை, மஞ்சள் மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரையிலும் காப்பீடு செய்து கொள்ளலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இதில் மரவள்ளிக்கிழங்கு 1, 385 ரூபாய் 60 பைசா, வாழை ஏக்கருக்கு 1, 842 ரூபாய் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வாலிபர் செய்த செயல்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

9-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் வாலிபர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 9-ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவியை அதே பகுதியில் வசிக்கும் சத்தியமூர்த்தி என்பவர் உன்னை திருமணம் செய்து கொள்ளுவதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் துறையினர் சத்தியமூர்த்தியை போக்சோ சட்டத்தின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கிய அதிகாரி…. அடித்து உடைத்த கட்சியாளர்கள்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சுங்கவாடியை அடித்து உடைத்ததால் வழக்கு செய்யப்பட்டு இருந்த நிலையில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த 9 பேருக்கு பிடிவாரண்டு உத்தரவை நீதிபதி வழங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை சுங்கவாடி முன்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என மத்திய அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேல்முருகன் தனது ஆதரவாளர்களுடன் 20 வாகனங்களில் வந்துள்ளார். அப்போது சுங்கவாடி ஊழியர்கள் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலித்துக் கொண்டு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேகமாக பரவிய தகவல்…. காவல்துறை அதிகாரியின் மனிதநேய செயல்…. குவிந்து வரும் பாராட்டுகள்….!!

கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் வழங்கிய துணை காவல்துறை சூப்பிரண்டுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாங்கல் கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவி உள்ளனர். இவர் எம்.காம் பட்டதாரி. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணான உஷாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் அவரை அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். அங்கு உஷாவை பரிசோதனை செய்த மருத்துவர் உடலில் ரத்தம் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனால் அவருக்கு ஏ […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 1000 லிட்டர்…. தப்பி ஓடிய மர்ம நபர்கள்…. வலைவீசி தேடும் போலீஸ்….!!

1000 லிட்டர் சாராய ஊழலை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின் படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல்துறை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் கல்வராயன் மலைப் பகுதியில் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நாரணபட்டி மற்றும் கொடமாத்தி கிராமத்தில் இருக்கும் ஓடைகளில் சாராயம் காய்ச்சுவதற்காக 5 பேரல்களில் 1௦௦௦ லிட்டர் சாராயம் ஊறலை பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அவற்றை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதை இணைகாதீங்க…. கிராம மக்கள் எதிர்ப்பு…. மாவட்ட கலெக்டருக்கு மனு….!!

நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கூலி வேலை மற்றும் விவசாயத் தொழில்களையும், பின் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை நம்பி தான் குடும்பம் நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர். இந்நிலையில்  நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள திருக்கோவிலூர் பகுதியுடன் மேலத்தாழனூர் ஊராட்சியை சேர்ப்பதாக தெரியவந்துள்ளது. அதனால் மேலத்தாழனூர் ஊராட்சியை நகராட்சியுடன் சேர்த்தால் தங்களுக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. தேடும் பணியில் காவல்துறையினர்….!!

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூலசமுத்திரம் பகுதியில் பத்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பத்மா அவரின் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் புகுந்த 2 மர்ம நபர்கள் பத்மாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். அப்போது பயத்தில் பத்மா […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீங்கள் வாக்களிக்க கூடாது…. திடீரென வெளிவந்த தகவல்…. அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்….!!

தங்களையும் வாக்களிக்க அனுமதிக்குமாறு ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சிக்கம்பட்டி மற்றும் குன்றத்தூர் போன்ற கிராமங்களில் இருக்கும் 6 வார்டுகளில் வசிக்கின்ற மக்கள் வாக்களிக்க இருந்துள்ளனர். ஆனால் தற்போது 4 வார்டுகளில் வசிப்பவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் எனவும் மீதமுள்ள 2 வார்டுகளில் வசிக்கும் மக்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை…. பாலித்தீன் பை வழங்கியதால் கடைக்கு சீல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சாராயம் விற்பனை செய்வதற்காக பாலித்தீன் பைகளை வழங்கிய மளிகை கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள 5 பகுதிகளில் காவல்துறையினர் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சாராய விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட வியாபாரிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அவர்கள் சாராயத்தை பாக்கெட்டுகளில் வைத்து விற்பதற்கு தேவைப்படுகின்ற பாலித்தீன் பைகளை மளிகை கடையில் வாங்கியதாக கூறியுள்ளனர். அதன் பின் கடைக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வீட்டில் வைத்து சாராயம் விற்பனை…. வசமாக சிக்கிய நபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகராஜபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் பின்புறமாக சாராயம் விற்பனை செய்த சரஸ்வதி மற்றும் முருகன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதைப்போல் எண்டியூர் கிராமத்தில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புதிதாக அமைக்கப்படும் சந்தை…. பொதுமக்களின் கோரிக்கை…. ஆய்வு செய்த கலெக்டர்….!!

மஞ்சள் கொள்முதல் நிலையம் அமைத்து தருமாறு கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குருகாவூர் சாலையில் இருக்கும் உழவர் உற்பத்தியாளர் வேளாண் வணிக மையத்தை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வின் போது அவர்களிடம் குழுவில் எத்தனை விவசாயிகள் உள்ளனர் என கேட்டுள்ளார். அதன்பின் குழுவில் இல்லாத விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்யப்படுகிறதா எனவும், எந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது எனவும், வேறு ஏதாவது பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தாயின் கண்டிப்பு… மகன் எடுத்த முடிவு… காத்திருந்த அதிர்ச்சி…!!

தாய் கண்டித்ததால் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குளத்தூர் பகுதியில் ஏழுமலை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் ருத்ரனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததால் அவருடைய தாயார் அவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ருத்ரன் தனது உறவினர் வீட்டிற்கு சென்று சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேலைக்கு போகதான் எடுத்துட்டு போனேன்… சி.சி.டிவி-யில் சிக்கிய மர்மநபர்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

இருசக்கர வாகனத்தை திருடிய வரை உங்கள் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சித்தேரி பகுதியில் கூலித் தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது இருசக்கரவாகனத்தை எடுத்து கொண்டு வேலைக்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கு கடைக்கு வெளியே நிறுத்திவிட்டு வேலை செய்து கொண்டிருந்தார். பின்னர் மதியம் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்து பார்த்தபோது இருசக்கரவாகனத்தை காணவில்லை. இதனைப்பற்றி முருகேசன் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பெயரில் காவல்துறையினர் அப்பகுதியில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இந்த நிலத்த உங்களுக்கு கொடுக்கல… தட்டிக்கேட்ட விவசாயிக்கு கல்லடி… விசாரணையில் போலீஸ்…!!

விவசாயியை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மட்டப்பாறை கிராமத்தில் சடையன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு துருர் பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கோவில் கட்டுவதற்காக அப்பகுதி பொதுமக்கள் சடையனிடம் கேட்டுள்ளனர். அதன்படி சடையனும் ஊர் பொதுவில் வைத்து அந்த நிலத்தை கோவிலுக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார். அவ்வாறு கிரையம் செய்து கொடுத்த நிலத்தின் அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தை சடையன் அனுபவித்து வந்துள்ளார். அவர் அங்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திருமண நிதி உதவி திட்டம்… மொத்தம் 557 பெண்கள்… தாலிக்கு தங்கம் வழங்கினார் ஆட்சியர்…!!

திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் திருமண நிதி உதவி வழங்கும் திட்டம் கலெக்டர் அலுவலக அரங்கில் வைத்து நடைபெற்றுள்ளது. இதில் பட்டப்படிப்பு முடித்த 331 பெண்களுக்கு தலா 50000 ரூபாயும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் 10 முதல் 12 வகுப்பு படித்த பெண்களுக்கு 226 பெண்களுக்கு தலா 25000 ரூபாயும் அரை கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த மினி லாரி… உள்ளே என்ன இருந்தது… சோதனையில் வெளிவந்த ரகசியம்…!!

மினி லாரியில் சாராயம் கடத்தி வந்தவர்களை காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்த வழியாக ஒரு மினி லாரி அதிவேகமாக வந்துள்ளது. உடனே காவல்துறையினர் அந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் லாரி டியூப்பில் சாராயம் இருந்ததை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் லாரியில் வந்த இரண்டு பேரையும் கைது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தமிழகத்திலும் திருப்பதி வரப்போகுது… ஏழுமலையான் கோவில்… முதல்வர் அடிக்கல் நாட்டினார்…!!

ஏழுமலையான் கோவிலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 4 ஏக்கர் 50 சென்ட் பரப்பளவில் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில் அதாவது ஏழுமலையான் கோவில் கட்டப்பட இருக்கிறது. மேலும் உளுந்தூர்பேட்டையில் இருந்து திருப்பதிக்கு புதிய பேருந்து சேவையையும் முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த விழாவில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு, அமைச்சர் சிவி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ரூ.381¾ கோடியில் மருத்துவமனை… எம்.பி நேரில் ஆய்வு… விரைவில் பணியை முடிக்க உத்தரவு…!!

ரூபாய் 381 கோடியே 76 லட்சத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வரும் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினரான பொன் கௌதமசிகாமணி நேரில் ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் கட்டுவதற்காக ரூபாய் 381 கோடியே 76 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்தப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினரான பொன் கவுதமசிகாமணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தியுள்ளார். இதில் மண் பரிசோதனை சான்று முறையாக பெற்றுள்ளதா, […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… சோதனையில் சிக்கிய பொருள்… கொத்தாக மாட்டிய கும்பல்…!!

சாராய விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காவல் துறையினருக்கு சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சவுகத்அலி மற்றும் பெருமாள் ஆகியோரது தலைமையிலான காவல்துறையினர் சங்கரபுரம் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதில் மோட்டாம்பட்டி சுடுகாடு அருகே தீர்த்தமலை மற்றும் சங்கர் பாலன் ஆகியோர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்ததை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“நாங்க 5 நிமிஷத்துல இறந்துடுவோம்”… துண்டிக்கப்பட்ட அழைப்பு… விசாரணையில் போலீஸ்…!!

தாயுடன் தூக்கில் தொங்கிய மகனும் மகளும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்தவர் சம்சுதீன் நிஷா. இவர் சென்னையை சேர்ந்த காஜா முகைதீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷப்ரின்,சபீர் என்ற 2 பிள்ளைகள் இருந்தனர். அதன்பின் உடல்நலக்குறைவால் காஜா முகைதீன் இறந்துவிடவே சம்சுதீன் நிஷா இரண்டாவதாக கள்ளகுறிச்சியை சேர்ந்த ஷெரிப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் பெங்களூரில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் இருக்கும் சம்சுதீன் நிஷா நேற்று […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

முட்புதரில் இருந்து வந்த புகை…. எரிந்த நிலையில் பெண்ணின் சடலம்…. மர்ம நபரை தேடும் போலீஸ்….!!

பெண்ணை எரித்துக் கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உள்ள மயிலாம்பாறை காட்டுப்பகுதியில் உள்ள முட்தோப்பில் ஒரு பெண் எரிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண்ணின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தில் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் இறந்து கிடந்த பெண் சோழம்பட்டு கிராமத்தைச் சார்ந்த வெண்ணிலா என்பது தெரியவந்துள்ளது. இவரது கணவனான […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாமி கும்பிட போனோம்… இப்படி ஆயிருச்சு… மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு…!!

கோவிலில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பெண்ணிடம் இருந்து 12 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கந்தசாமிபுரத்தை சார்ந்தவர் அம்பிகாபதி-சுலோச்சனா தம்பதியினர். இவர்கள் சின்னசாமி நகரில் இருக்கும் கோவிலில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். அங்கு கும்பாபிஷேக விழா முடிந்ததும் அன்னதானத்தை பெற்றுக் கொண்டு இருவரும் வெளியே வந்துள்ளனர். அப்போது சுலோச்சனா கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தங்கச் நகைகள் காணாமல் போனதை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கேட்டது கொடுங்க” வேற கல்யாணம் பண்ணிவிடுவேன்…. வரதட்சனை கொடுமை…. பெண் எடுத்த அதிரடி முடிவு….!!

வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதால் பெண் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் 2 பேரை கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டு கிராமத்தை சார்ந்தவர் சதீஷ்குமார்-கலைவாணி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு திருமணம் நடக்கும்போது சதீஷ்குமாரின் குடும்பத்தினர் கேட்ட வரதட்சணையை கலைவாணியின் பெற்றோர் கொடுத்துள்ளனர். அதன்பின் தற்போது மீண்டும் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியுள்ளனர். அத்துடன் சதிஷ்குமார் புதிதாக தொழில் தொடங்குவதற்கு 2 லட்சம் ரூபாயை கலைவாணியின் பெற்றோர் தர வேண்டும் இல்லையென்றால் வேறு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“என் கணவர் இல்லாத உலகத்தில் நான் வாழ விரும்பல” குழந்தையுடன் மனைவி செய்த செயல்… கள்ளகுறிச்சியில் நடந்த சோகம்…!!

கணவர் இறந்த சோகத்தில் குழந்தையுடன் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுவங்கூர் கிராமத்தைச் சார்ந்தவர் தாமோதரன்-திவ்யா லக்ஷ்மி தம்பதியினர். இவர்களுக்கு நான்கு வயதில் சாலிக்கியா என்ற ஒரு மகள் இருந்தார். தாமோதரன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்துவிட்டார். தாமோதரன் இறந்த மன வேதனையில் திவ்யா லக்ஷ்மி அடிக்கடி அழுது கொண்டே இருப்பார். இதனால் உறவினர்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்துள்ளனர். ஆனால் கணவரை மறக்க […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எங்க கிட்ட சண்டை போடுறாங்க…. மாத்தி கொடுங்க…. ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டம்…..!!

ரேஷன் கடை பணியாளர்கள் பயோமெட்ரிக் எந்திரத்தை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தின் முன்பு நேற்று பயோமெட்ரிக் எந்திரத்தை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே ஸ்கேனிங் முறையில் பொருட்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில் தற்போது கைரேகை பதிவு மூலம் பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டது. பயோமெட்ரிக் இயந்திரம் 2ஜி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

1 லாரி 2 கார்…. ஓட்டுனரின் கவனக் குறைவு…. பரிதாபமாக போன உயிர்….!!

அடுத்தடுத்து இரண்டு கார்கள் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையிலிருந்து கேரளா நோக்கி கெங்கராஜன் என்பவரால் லாரி ஓட்டி வரப்பட்டது. தியாகதுருகம் புறவழிச்சாலையில் அந்த லாரி வந்தபோது எதிரே வந்த விருத்தாசலத்தைச் சேர்ந்த பர்வீன் பானு என்பவருடைய கார் மீது மோதியது. பின்னர் அந்த லாரி எதிரே வந்த திருக்கழுக்குன்றத்தை சார்ந்த மாணிக்கம், ராணி, அமிர்தம்மாள் ஆகியோர் பயணித்து வந்த கார் மீது மோதியது. இந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போலீஸ் சார்…! ரொம்ப அவசரம்… கொஞ்சம் அனுப்புங்க… கைதியால் காத்திருந்த அதிர்ச்சி ..!!

போலீஸ் ஏட்டை தாக்கி விட்டு தப்பிச் சென்ற சிறைக் கைதியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட வழக்கில் கிடைத்த தகவலின் படி சின்னசேலம் போலீஸ் ஏட்டுகள் முஸ்தபா, சிவராமன், சுப்பிரமணியண் ஆகியோர் நாமக்கல் கிளை சிறையில் இருந்த சக்கரவர்த்தி, சௌந்தர்ராஜன் ஆகியோரை விசாரணை செய்வதற்காக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றுள்ளார். ஆத்தூர் பஸ் நிலையம் வந்ததும் சிறுநீர் கழிக்க வேண்டும் என கைதி சக்கரவர்த்தி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போதையில் வந்த கணவர்… கண்டித்த மனைவிக்கு.. காத்திருந்த சோகம்…!!

டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாதவச்சேரி கிராமத்தை சார்ந்தவர் ஞானபண்டிதன் இவருடைய மகன் ரவி என்பவர் நெல் அறுவடை எந்திர டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் மஞ்சப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அனிஷாவை திருமணம் செய்து ஓர் ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருக்கின்றனர். ரவி அனுஷாவின் தாய் வீட்டிற்கு சென்று அவரை விட்டுவிட்டு மூன்று நாட்களுக்குப் பின்பு அனுஷாவை காண்பதற்காக மஞ்சப்புத்தூர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பஸ் மீது கல்வீச்சு…. அலறிய மக்கள்…. மர்ம நபரை தேடும் போலீஸ்….!!

ஓடிக்கொண்டிருந்த பஸ் கண்ணாடி மீது கல்லை வீசியதால் திருக்கோவிலூர் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் நேற்று மாலை அரசு பஸ் திருக்கோவிலூர் பகுதியில் இருந்து நாசர்புரம் நோக்கி வந்துகொண்டிருந்தது அந்த சமயத்தில் மர்ம நபர் ஒருவர் கல்லை எடுத்து பஸ்ஸின் பின்பக்க கண்ணாடி மீது வீசினார். இதில் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் பேருந்திலிருந்த பயணிகள் கூச்சலிட்டதையடுத்து ஓட்டுநர் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தொல்லை பண்ணாதீங்க…. வாலிபரின் ஏமாற்றும் எண்ணம்… கைது செய்த காவல்துறை…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி கிராமத்தில் வீரபத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு, பின் சொந்த ஊருக்கு வந்துவிட்டார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் 13 வயது சிறுமியிடம் வீரபத்திரன் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதுவரை ஒருவர் கூட இறந்ததில்லை… விபத்தில் உயிரிழந்த ஆம்புலன்ஸ் டிரைவர்… கண்ணீர் வடிக்கும் கிராம மக்கள்…!!

டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அத்தியூர் அண்ணாநகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகந்தி என்ற மனைவியும், கோபிநாத் மற்றும் ரகுநாதன் என்ற மகன்களும் உள்ளனர். அதோடு சுகந்தி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். மணிகண்டன் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக வடபொன்பரப்பி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரிகிறார். இந்நிலையில் மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் […]

Categories

Tech |