Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 2,200 லிட்டர்…. அதிரடி வேட்டை…. போலீஸ் வலைவீச்சு….!!

2,200 லிட்டர் சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கிராமத்தில் அரகண்டநல்லூர் காவல்துறையினர் சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காட்டுப்பகுதியில் 2,200 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் அதை கீழே கொட்டி அழித்துள்ளனர். இது சம்பந்தமாக அதே பகுதியில் வசிக்கும் ராமு என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பேருந்தில் கடத்தல்…. சோதனையில் சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பேருந்தில் புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள டி.அத்திப்பாக்கம் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெங்களூருவிலிருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் வாலிபர் ஒருவர் வைத்திருந்த இரண்டு பைகளை சந்தேகத்தின் பேரில் திறந்து பார்த்த போது 20 கிலோ எடையுடைய 975 புகையிலை பாக்கெட்டுகள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து விசாரணையில் அந்த வாலிபர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“2 மணிநேரம் தாமதம்” குழந்தை- தாய் மரணம்…. கோட்டாட்சியர் விசாரணை….!!

பிரசவம் நடைபெற்ற சில மணி நேரத்தில் பச்சிளம் குழந்தையுடன் தாயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தண்டராம்பட்டு அருகில் இருக்கும் திருவடுத்தனூர் பகுதியில் சாதிக் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசினா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அசினா பிரசவத்திற்காக மூங்கில்துறைப்பட்டில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் அசினாவை அருகில் இருந்த ஆரம்ப சுகாதார […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீர் சோதனை…. வசமாக சிக்கிய உரிமையாளர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெட்டிக் கடையில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டை காவல்துறையினர் அப்பகுதி கடைவீதியில் இருக்கும் ஒரு பெட்டிக் கடையில் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து கடை உரிமையாளர் விஷ்ணு தாஸ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 11 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திடீரென வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெருமாள் நாயக்கர் பகுதியில் அருணாசலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறார். அதன்பின் கடந்த 2 தினங்களாக இவரின் வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதைப் பார்த்து சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பார்த்த போது உடல் அழுகிய நிலையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதல்…. ஓட்டுனருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குலதீபமங்கலம் கிராமத்தில் ரகோத்தமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராக்டர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் டிராக்டரில் கரும்புக் கட்டுகள் ஏற்றிக்கொண்டு தனியார் சர்க்கரை ஆலைக்கு சென்றுள்ளார். அதன்பின் ரகோத்தமன் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மணல் கடத்தல்…. குற்றவாளிகள் தப்பி ஓட்டம்…. போலீஸ் வலைவீச்சு….!!

மாட்டு வண்டியில் மணல் கடத்திய 3 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆற்காடு கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மூன்று மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதன்பின் வண்டிகளை ஓட்டி வந்தவர்கள் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதைப் பார்த்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனைத் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெட்டிக்கடையில் விற்பனையா..‌‌.. சோதனையில் சிக்கிய பெண்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெட்டிக் கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வி.புதூர் கிராமத்தில் இருக்கும் பெட்டி கடையில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த மீனா என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின் அவரிடம் இருந்த 21 புகையிலை பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் முன்னிலையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்…. 2 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!

பொது கிணற்றில் தண்ணீர் இறைப்பது சம்பந்தமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள  பாவளம் பகுதியில் பெரமன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் அருணாச்சலம் என்பவருக்கும் இடையே பொது கிணற்றில் தண்ணீர் இறைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனை அடுத்து பெரமன் தண்ணீர் இறைத்த போது அவரை அருணாச்சலம் மற்றும் அவரது உறவினர்கள் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெட்டி கடையில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விளக்கூர் பகுதியில் பெட்டி கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த சையத் அப்சல் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 26 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீராத நுரையீரல் நோய்…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நுரையிரல் நோயால் அவதிப்பட்ட விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள லாலாப்பேட்டை பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவர் நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் திடீரென விஷம் குடித்து விட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். அதன்பின் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

என்னால் தாங்க முடியல…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தீராத வயிற்று வலியால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொற்படாக்குறிச்சி கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரிஷனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அவ்வப்போது குடித்து வந்துள்ளார். அதன்பின் சக்திவேல் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. பெண் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வீட்டின் பின்புறத்தில் சாராயம் விற்பனை செய்த சாந்தி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 25 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தலா 100 ரூபாய்…. அதிகாரிகளின் செயல்…. துணை இயக்குனர் உத்தரவு….!!

பொது இடங்களில் புகைப்பிடித்த 6 நபர்களுக்கு சுகாதாரத்துறையினர் தலா 100 ரூபாய் அபராதம் வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொது இடம் மற்றும் பேருந்து நிலையங்களில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி உத்தரவின் படி வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் தலைமையில் சுகாதார துறையினர் தீவிர ஆய்வு செய்துள்ளனர். அப்போது பொது இடங்களில் புகைப் பிடித்த 6 நபர்களுக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனை அடுத்து கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கட்டாயம் பொருத்த வேண்டும்…. திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம்…. உரிமையாளர்கள் பங்கேற்பு….!!

நகை அடகு மற்றும் நகை கடை உரிமையாளர்களுக்கு காவல்துறை சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து காவல்துறை சார்பாக நகை மற்றும் நகை அடகு கடை உரிமையாளர்களுக்கு நகைகளை பாதுகாப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, இன்ஸ்பெக்டர் முருகேசன் முன்னிலை வகித்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் துணை சூப்பிரண்டு ராஜலட்சுமி தலைமை தாங்கி கூறியதாவது, நகை அடகு மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் கடையில் வெளிப்புறம் மற்றும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சேஷசமுத்திரம் ஏரிக்கரை அருகில் சாராய விற்பனை செய்த ராமர் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதனை அடுத்து இதே போல் கொசப்பாடி கிராமத்தில் வீட்டின் அருகாமையில் சாராயம் விற்பனை செய்த ராஜேந்திரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காணாமல் போன வாலிபர்…. கிணற்றில் கிடந்த சடலம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புகையிலை தோட்டப் பகுதியில் உதய பாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனநிலை பாதிக்கப்பட்ட இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென காணாமல் போய்விட்டார். அதன்பின் உறவினர்கள் பல பகுதிகளில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து வீட்டின் பின்புறம் இருக்கும் கிணற்றில் உதய பாரதி இறந்து சடலமாக கிடந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் உதய […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“மகளை திட்டிய தாய்” மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வீட்டில் வேலை செய்யாமல் இருப்பதற்கு தாய் திட்டியதால் பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள  எலவடி கிராமம் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விமலா அரசி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டு வேலையை சரியாக செய்யவில்லை என இவரது தாய் திட்டிய காரணத்தினால் விமலா அரசி மன […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விவசாயி வீட்டில் கொள்ளை…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

விவசாயி வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புத்திராம்பட்டு பிள்ளையார் கோவில் பகுதியில் சொர்ணம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்திருக்கிறார். இவரது கணவர் மற்றும் மகன் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சொர்ணம் தனது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் இருக்கும் தனது மகள் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அதன்பின் தனது வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

2 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்பாடி பேருந்து நிறுத்தம் அருகாமையில் இரண்டு அரசு பேருந்துகள் அடுத்தடுத்து சென்று கொண்டிருக்கும் போது மர்ம நபர்கள் பேருந்தின் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். இதனால் இரண்டு பேருந்துகளில் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் இது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாணவர்களிடையே மோதல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

பேருந்து நிலையத்தில் இரண்டு குழுக்களாகப் பிரிந்து மாணவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் பள்ளிக்கூடங்கள் முடிந்த பிறகு மாணவர்கள் பேருந்தில் ஏறி வீட்டிற்கு செல்ல பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த மாணவர்கள் சிலர் இரு கோஷ்டிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்கி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இறையூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வெள்ளாற்றில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மணல் கடத்தி விற்பனை செய்து வந்த ஆனந்தன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த இருசக்கர வாகனம் மற்றும் மணல் மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மோட்டாரை சரி செய்ய சென்ற தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கிணற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள லா.கூடலூர் கிராமத்தில் வல்லரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் கிணற்றின் நீருக்குள் மூழ்கி மோட்டாரை வெளியே எடுத்து வரும் வேலையில் ஈடுபட்டிருக்கும் போது வெகு நேரமாகியும் வல்லரசு வெளியே வரவில்லை. இதனால் அங்கிருந்தவர்கள் கிணற்றில் குளித்து தேடிப் பார்த்ததில் அவர் கிடைக்கவில்லை. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போதிய வசதி இல்லை…. பொதுமக்கள் சாலை மறியல்…. தற்காலிகமாக நிறுத்தி வைப்பு….!!

சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வி.கூட்டு ரோட்டிலிருந்து விருதாச்சலம் வரை தேசிய நெடுஞ்சாலை அமைந்திருக்கிறது. இதில் கீழ்குப்பத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் சுங்கச்சாவடியில் முதல் கட்டணம் வசூலிக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இதை அறிந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துச் சுங்கச்சாவடியின் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்துள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அண்டம்பள்ளம் கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் வசிக்கும் வீரபாண்டி மற்றும் சுரேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாய் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாடியந்தல் கிராமத்தில் சத்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சத்யராஜ் திடீரென தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதன்பின் அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சத்யராஜை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாலையோரத்தில் வழிந்த கழிவுநீர்…. பொதுமக்கள் போராட்டம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

கழிவுநீர் கால்வாயை தூர்வாராமல் இருப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருவேப்பிலங்குறிச்சியில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கழிவுநீர் கால்வாய் தூர் வாராமல் இருப்பதினால் அதில் செல்லும் நீர் கால்வாயில் செல்லாமல் பேருந்து நிறுத்தத்தின் வழியாக ஆண்டிமடம் செல்லும் சாலை ஓரத்தில் வழிந்து ஓடுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. இது பற்றி புகார் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கை…. அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம்…. கோட்டாட்சியர் தகவல்….!!

குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பொது விநியோகத் திட்டத்தின் சார்பாக மாதாந்திர நுகர்வோர் பாதுகாப்பு குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் சரவணன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் குடிமைப்பொருள் தனி தாசில்தார் வெங்கடேசன் முன்னிலை வகித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் நுகர்வோர் சங்க செயலாளர் அருண்கென்னடி பேசியதாவது, இம்மாவட்டத்தில் பிரதான சாலையோரம் இருக்கும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சந்தேகத்தின் பேரில் சோதனை…. வசமாக சிக்கிய பெண்…. போலீஸ் நடவடிக்கை….!!

மின் ஊழியர் வீட்டில் நகை மற்றும் வெள்ளிக் கொலுசுகளை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் முருகன் கோவில் அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணை சந்தேகத்தின் பேரில் பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் கிளாப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பரிமளா என்பதும், தற்போது வாணியந்தல் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருவதும், பின்னர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

முகநூலில் வீடியோ பதிவேடு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

மன உளைச்சலால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழைய சிறுவங்கூர் கிராமத்தில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே கிராமத்தில் வசிக்கும் பெண்ணை ஏமாற்றியதாக விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பினர் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு மதியழகனை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு அவர் விஷம் குடித்து விட்டு அதை முகநூலில் பதிவிட்டு மயங்கி விழுந்ததாக தெரியவந்துள்ளது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ரகசியமாக கண்காணித்து வருகிறோம்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கடைகளில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி அங்கு தடை செய்யப்பட்டிருக்கும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து வருவதுடன், வருவாய்த் துறையினர் உதவியுடன் விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் புகையிலைப் பொருட்களை கடைகளுக்கு சப்ளை செய்பவர்களை காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதனை அடுத்து திருக்கோவிலூர் புறவழிச் சாலையில் இருக்கும் மண்டபம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 1,000 லிட்டர்…. குற்றவாளி தலைமறைவு…. போலீஸ் வலைவீச்சு….!!

சட்ட விரோதமாக 1௦௦௦ லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் காவல்துறையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குரும்பலூர் கிராம ஓடையில் இரண்டு பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1௦௦௦ லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தலைமறைவாக இருக்கும் கோபி என்பவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. 6000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு…. போலீஸ் வலைவீச்சு….!!

சட்ட விரோதமாக சாராய ஊழலை பதுக்கி வைத்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மல்லிகை பாடி வனப்பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 6 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்துள்ளனர். இது சம்பந்தமாக அதே கிராமத்தில் வசிக்கும் குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்” பொதுமக்கள் புகார்…. ஆட்சியரின் உத்தரவு….!!

கலெக்டரின் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நிலத்தை அளவீடு செய்யும் பணி நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலையில் இருக்கும் வெள்ளிமலை பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களை கட்டி வருகின்றனர். இதனை தடுக்கக் கோரி பொதுமக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் கல்வராயன்மலையில் நீர்நிலைகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கல்வராயன்மலை தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த சுவர்…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிளாப்பாளையம் கிராமத்தில் பூங்காவனம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தாய் இன்றி தவிக்கும் குழந்தைகள்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

3 குழந்தைகளுக்கு தாயான பெண் திடீரென பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருபாலபந்தல் பகுதியில் தென்னரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசக்தி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் சிவசக்தி திடீரென தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கொசப்பாடி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் புகையிலை பொருட்கள் வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவரை விசாரணை நடத்தியதில் அவர் செல்லம்பட்டு கிராமத்தில் வசிக்கும் பரத் என்பதும், சங்கராபுரத்தில் இருக்கும் மளிகை கடையில் புகையிலை பொருட்களை வாங்கி வந்ததும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முகையூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் வயல்வெளி பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது சுப்பிரமணியன் என்பவரின் வயல்வெளி அருகாமையில் வந்த நிலையில் முருகன் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த பாறை மீது மோதி கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திருடப்பட்ட ஆடுகள்…. சோதனையில் சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

மற்றொருவரின் ஆடுகளை திருடி வந்து சந்தையில் விற்பனை செய்வதற்காக சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செட்டிதாங்கல் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் ஆடுகளுடன் வந்த 2 வாலிபர்களை மடக்கிப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் காட்டுச்செல்லூர் கிராமத்தில் வசிக்கும் தினேஷ் மற்றும் விக்னேஷ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இவர்கள் கொண்டு வந்த ஆடுகள் கொம்பசமுத்திரம் பகுதியில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தமாக 1200 லிட்டர்…. தலைமறைவாக இருக்கும் குற்றவாளி…. போலீஸ் வலைவீச்சு….!!

சட்ட விரோதமாக சாராய ஊறல்களை பதுக்கி வைத்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறையினர் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மல்லிகைபாடி அருகில் இருக்கும் கோமக்காடு ஓடையில் 6 பேரல்களில் 1,200 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டு பிடித்த காவல்துறையினர் அதை தரையில் ஊற்றி அழித்துள்ளனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட அதே பகுதியில் வசிக்கும் ராஜேஷ் என்பவரை காவல்துறையினர் வலைவீசி தேடி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புகையிலைப் பொருட்கள் கடத்தல்…. சோதனையில் சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

அரசு பேருந்தில் 40 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் பக்கம் கிராமத்தில் இருக்கும் சோதனை சாவடியில் மணலூர்பேட்டை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த கர்நாடக மாநில அரசு பேருந்ததை நிறுத்தி சோதனை செய்ததில் வாலிபர் ஒருவரிடம் இருந்த பையை சந்தேகத்தின் பேரில் திறந்து பார்த்த போது அதில் தடைசெய்யப்பட்ட புகையிலை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தீராத வயிற்று வழியால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மெயின் ரோடு பகுதியில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் திடீரென விஷம் குடித்து விட்டு மயங்கி கீழே விழுந்து கிடந்துள்ளார். அதன்பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற விவசாயி…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

விவசாயி ஒருவரின் வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கானாங்காடு பிள்ளையார் கோவில் பகுதியில் ராஜேஷ் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது வீட்டை பூட்டி விட்டு திருவண்ணாமலையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 13 கிலோ வெள்ளி பொருட்கள், […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்…. மகளின் சாவில் சந்தேகப்பட்ட தாய்…. கோட்டாட்சியர் விசாரணை….!!

திருமணமாகி 4 மாதமான இளம்பெண் உயிரிழந்தது பற்றி கோட்டாட்சியர் சரவணன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சித்தால் கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் சந்தியா என்பவருக்கும் கடந்த 4 மாதத்திற்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. அதன்பின் கடந்த இரண்டு மாதமாக சந்தியா மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். பின்னர் வீட்டில் இருந்த சந்தியாவிற்கு திடீரென வாந்தி ஏற்பட்டால் மயங்கிக் கீழே விழுந்துள்ளார். பிறகு அவரை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் நின்ற ஆடு…. வாலிபருக்கு நடந்து விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தனது ஆட்டை காப்பாற்ற சென்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நகர் கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் இருக்கும் ரயில்வே கேட் அருகாமையில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது தண்டவாளத்தில் அவரது ஆடு ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்நேரம் அவ்வழியாக ரயில் ஒன்று வந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் உடனே அந்த ஆட்டை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய இருசக்கர வாகனம்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

டிராக்டர் மீது மோதியதில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மைக்கேல்புரம் பகுதியில் சின்னதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வடபொன்பரப்பியில் இருந்து தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கும் போது முன்னால் சென்ற டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சின்னதுரை டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்தில் பரிதாபமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 30 லிட்டர்…. வீட்டில் வைத்து விற்பனை…. போலீஸ் நடவடிக்கை….!!

வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தியாகராஜபுரத்தில் வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்த அதே ஊரில் வசிக்கும் மொட்டையம்மாள் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின் அவரிடம் இருந்த 30 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தல்…. தப்பி ஓடிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டை காவல்துறை சரகம் சு. கள்ளி பாடி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மோட்டார் சைக்கிள் மூலமாக மணல் கடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் மணலூர்பேட்டை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சாக்கு மூட்டைகளுடன் வந்த மூன்று இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் வழிமறித்துள்ளனர். அந்நேரம் மோட்டார் சைக்கிளுடன் மூட்டைகளை அங்கேயே போட்டுவிட்டு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கோவிலில் சோதனை…. கண்காணிப்பு பணியில் போலீஸ்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

லட்சுமி நரசிம்மர் கோவிலில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் கோவில் வளாகம், உள்பிரகாரம், பக்தர்கள் ஓய்வு மண்டபம் என அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெற்று இருக்கிறது. இதனை அடுத்து உளுந்தூர்பேட்டை சுற்று வட்டாரத்தில் இருக்கும் இரண்டு சிவன் கோயில்கள் மற்றும் ரயில் நிலையத்திலும் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம்…. பக்தர்கள் பங்கேற்பு…. நிர்வாகிகளின் செயல்….!!

அமாவாசை தினத்தை முன்னிட்டு அம்மன் கோவில்களில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சித்தலூர் கிராமத்தில் இருக்கும் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசை தினத்தையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இந்நிலையில் பால், இளநீர், தேன் மற்றும் தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று இருக்கிறது. இதில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அம்மன் கோவிலில் வலம் வந்து மண்டபத்தின் நடுவில் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டு நடைபெற்றிருக்கிறது. […]

Categories

Tech |