Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட மூடுபனி…‌. வாகன ஓட்டிகள் அவதி…. பொதுமக்கள் வீட்டில் முடக்கம்….!!

மூடுபனி அதிக அளவில் இருக்கிறதால் பொதுமக்கள் பலரும் வெளியே வருவதை தவிர்த்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது வழக்கத்திற்கு மாறாக மூடுபனி பெய்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை தெரிந்து கொள்வதற்காக முகப்பு விளக்குகளை எரிய விட்டு மெதுவாக சென்றுள்ளனர். இதனையடுத்து மூடுபனியின் காரணமாக பொதுமக்கள் பலரும் வெளியே வருவதை தவிர்த்துள்ளனர். பின்னர் சூரியன் உதிக்க தொடங்கிய நிலையில் மூடுபனி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

5000 மூட்டை வந்திருக்கு…. ஒரே நாளில் 74 லட்சம்…. விறுவிறுப்பாக நடைபெற்ற விற்பனை….!!

ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ஒரே நாளில் 74 லட்ச ரூபாய்க்கு தானியங்கள் விற்பனையாகி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லூரில் செயல்பட்டு வருகின்ற தமிழக அரசின் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கடந்த ஒரு வார காலமாக நெல் வரத்து தொடங்கி இருக்கின்ற நிலையில் தற்போது ஒரே நாளில் 5000 மூட்டை வந்துள்ளது. இவற்றின் குறைந்தபட்ச விலையாக 980 ரூபாயும், அதிகபட்சமாக 1,480 ரூபாயுமாக இருந்துள்ளது. இதனையடுத்து எல்.இ.டி. 37 ரக நெல்லுக்கு குறைந்தபட்சம் 980 […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காரணம் என்ன….? விவசாய எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேலத்தாழனூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் ஆறுமுகம் தனது வீட்டில் திடீரென விஷம் குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிழே கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கதறி அழுத சிறுமி…. முதியவருக்கு தர்ம அடி…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

6 வயது சிறுமிக்கு கூலித்தொழிலாளி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 6 வயதுடைய சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் 1-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது தாயாருடன் பண்ருட்டி பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக கெடிலத்தில் இருந்து தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் இருக்கையில் அமர்ந்தபடி பயணம் செய்த தேவியானந்தல் கிராமத்தில் வசிக்கும் கூலி தொழிலாளியான […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென பழுதான லாரி…. வாலிபர்களுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

முன்னால் சென்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதி 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மணியனூர் கிராமத்தில் விக்ரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விக்ரம் தனது உறவினரான சிவா என்பவருடன் காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரில் இருக்கும் மாமியார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்ததாக இருக்கும் ராயப்பனூர் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நாங்கள் வாங்கவே இல்லை…. மோசடி செய்த மர்ம நபர்கள்…. தீவிர விசாரணையில் அதிகாரிகள்….!!

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற மோசடி தொடர்பாக விசாரணை நடத்த இயக்குனர் சிவனேசன் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மேல் மலை கிராமத்தில் வசிக்கும் கலியபெருமாள் உள்பட 2 விவசாயிகள் பெயரில் நகைக் கடன் வழங்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் விவசாயிகள் இருவரும் குறிப்பிட்ட கூட்டுறவு வங்கியில் நகை கடன் பெற வில்லை எனவும், தங்களது பெயரில் யாரோ மர்ம நபர் போலியாக கையெழுத்துப் போட்டு கடன் பெற்று இருப்பதாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நடைபயிற்சி சென்ற வியாபாரி…. கொலை முயற்சியில் ஈடுபட்ட கும்பல்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

பாத்திரக்கடை வியாபாரியை கொலை செய்ய முயற்சி செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேவனூர் கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாடகை பாத்திரம் மற்றும் சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் விஜயகுமார் ரயில்வே பாதையில் நடை பயிற்சி சென்று கொண்டிருக்கும் போது அங்கு வந்த விஜய் மற்றும் அவரது நண்பர்கள் வெங்கடேசன் உள்பட 5 பேர் சேர்ந்த கும்பல் சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய ஓட்டுனர்…. போலீஸ் வலைவீச்சு….!!

சாராயம் காய்ச்சுவதற்காக வெல்லத்தை கடத்தி சென்ற லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் மேம்பாலத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ய முயற்சி செய்த போது அதிலிருந்து ஒருவர் தப்பி ஓடியுள்ளார். அதன்பின் லாரி ஓட்டுனரை காவல்துறையினர் பிடித்து மினி லாரியில் இருந்த காய்கறி மூட்டைகளை சோதனை செய்துள்ளனர். இதில் காய்கறி மூட்டைகளுக்கு அடியில் 120 லிட்டர் சாராயம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நான் வேலை வாங்கித்தரேன்…. பணம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு….!!

நிதித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த தம்பதியினர் உள்பட 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கரும்பூரில் காந்தாமணி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரும் ஜெயமூர்த்தி என்பவரும் கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு செல்வது வழக்கமாக வைத்துள்ளனர். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் வேலை எதுவும் இல்லாமல் இருந்து வந்த கந்தாமணிக்கு நீதித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஜெயமூர்த்தி, அவரது மனைவி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஏன் ஒழுங்கா படிக்கல” மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தாய் கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காந்தி நகர் பகுதியில் வர்ஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அரையாண்டு தேர்வில் வர்ஷா மதிப்பெண் குறைவாக எடுத்ததால் அவரை அவரது தாய் ரமணி ஏன் சரியாக படிக்கவில்லை என கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த வர்ஷா வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சந்தேகமா இருந்துச்சு…. சோதனையில் சிக்கிய பெண்…. போலீஸ் நடவடிக்கை….!!

பேருந்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மும்முனை சந்திப்பு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு பேருந்திலிருந்து இறங்கி வந்த பெண்ணிடம் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் ஏராளமான மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அவரை விசாரணை நடத்தியதில் அவர் சித்தால் கிராமத்தில் வசிக்கும் பச்சையம்மாள் என்பதும், புதுச்சேரி பகுதியில் இருந்து மதுபாட்டில்களை பேருந்தில் கடத்தி வந்து விற்பனை செய்ய இருந்ததும் காவல்துறையினருக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விரைவில் வரவிருக்கும் பண்டிகை…. விறுவிறுப்பாக நடைபெற்ற சந்தை…. அலைமோதிய வியாபாரிகள்….!!

பொங்கல் பண்டிகை தினத்தை முன்னிட்டு வார சந்தையில் விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனை செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அத்தியூர் பகுதியில் இருக்கும் சந்தை மேட்டில் கால்நடை வாரச்சந்தை நடைபெற்றுள்ளது. இதில் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் மாடு மற்றும் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இதை உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் வசிக்கும் வியாபாரிகளும் வாங்கி செல்வது வழக்கமாக இருக்கிறது. அதன்பின் இங்கு முக்கிய பண்டிகை மற்றும் விஷேச நாட்களில் வியாபாரம் அதிக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற குடும்பங்கள்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத பெற்றோர்….!!

சுற்றுலா சென்று விட்டு வந்து கொண்டிருக்கும் போது பாறையின் மீது கார் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பூட்டை ரோடு பகுதியில் பீட்டர் பிரான்சிஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பீட்டர் பிரான்சிஸ் அவரின் நண்பர் ஜார்ஜ் ஆகியோர் தனித்தனி குடும்பத்துடன் 2 கார்களில் கல்வராயன்மலைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் பல இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு அவர்கள் மீண்டும் தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருக்கும் போது பீட்டர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாணவிகளை ஏற்றி சென்ற ஆட்டோ…. கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

4 வாலிபர்கள் ஆட்டோவை வழிமறித்து கண்ணாடியை உடைத்து ஓட்டுனருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள டி.எடப்பாளையம் கிராமத்தில் அர்வாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த 4 மாணவிகளை தனது ஆட்டோவில் அழைத்துக்கொண்டு டி.எடப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது 4 மர்ம நபர்கள் திடீரென ஆட்டோவை வழிமறித்து அர்வாசிடம் தகராறு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தமாக 14,500 வசூல்…. கட்டாயம் பின்பற்ற வேண்டும்…. கோட்டாட்சியரின் அறிவுரை….!!

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுகிறார்களா என வணிக வளாகங்களில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கடைகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றதா என ஆய்வு செய்யவும், விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கவும் கலெக்டர் ஸ்ரீதர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் சரவணன் துணிக்கடைகள், அரசு மருத்துவமனைகள் உள்பட பல பகுதிகளில் ஆய்வு செய்துள்ளார். பின்னர் முககவசம் அணியாதவர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

முறையாக வழங்கவில்லை…. பொதுமக்கள் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

மண்ணெண்ணெய் முறையாக வழங்காததால் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க மறுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழைய உச்சிமேடு கிராமத்தில் 500-க்கும் அதிகமாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் இவர்களுக்கு பகுதி நேர ரேஷன் கடையின் மூலமாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இப்பகுதி மக்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக ரேஷன் கடை விற்பனையாளர் அம்பிகா புது உச்சிமேடு ரேஷன் கடையில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்பை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புகார் பெட்டியில் போடலாம்…. கூட்டம் ஒத்திவைப்பு…. ஆட்சியரின் தகவல்….!!

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுக்க பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியதாவது, கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் கூடுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதர குறைதீர்க்கும் கூட்டங்கள் மற்றும் மனு பெரும் நிகழ்ச்சிகளும் ரத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” நிருபர்களிடம் பேட்டி…. ஆட்சியரின் தகவல்….!!

பஞ்சமி நிலங்களில் முறைகேடாக பட்டா பெற்று பயன்படுத்தி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பூசப்பாடி கிராமத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக 120 ஏக்கர் பஞ்சமி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா சுதந்திரம் அடைந்த பின் கொண்டுவரப்பட்ட நிலசீர்திருத்த சட்டத்திற்கு பிறகு கிராமத்தில் குடியேறிய ஆதிதிராவிடர் அல்லாத 32 நபர்கள் பஞ்சமி நிலங்களை சட்ட விரோதமாக கைப்பற்றி 1980-1990-ம் வருட கால கட்டங்களில் முறைகேடாக பட்டா […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விண்ணப்பிக்க கால அவகாசம்…. செய்திக் குறிப்பில் வெளியீடு…. ஆட்சியரின் தகவல்….!!

மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டித்திருப்பதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கலெக்டர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியதாவது, தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும், அரசு பள்ளி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 11-ஆம் வகுப்பு முதல் பி.எச்.டி படிப்பு வரை படிக்கும் கிறிஸ்துவர், சீக்கியர், புத்த, பார்சி, இஸ்லாமிய மதங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளிடம் இருந்து 2021-2022 ஆம் வருடத்திற்கு மத்திய அரசின் பள்ளி மேற்படிப்பு வருவாய் மற்றும் தகுதி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 14 லட்சம்…. தீவிரமாக நடைபெறும் பணிகள்…. ஆட்சியரின் ஆய்வு….!!

வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்டத்திலுள்ள ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக நடைபெற்று வருகின்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ஆனால் முன்னதாகவே அத்தியூர் ஊராட்சியில் 17 லட்சம் மதிப்பீட்டில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் திறந்தவெளி கிணறு வெட்டும் பணி மற்றும் புதிதாக அமைக்கப்படும் நீர் உறிஞ்சு குழாய்கள் அமைக்கும் பணி உள்ளிட்டவைகளை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ரகளையில் ஈடுபட்ட நபர்…. பயணிகள் அச்சம்…. போலீஸ் நடவடிக்கை….!!

சாலையில் சென்ற அரசுப் பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டையில் இருந்து சங்கராபுரம் நோக்கி செல்லும் அரசு பேருந்தை ஏழுமலை என்ற ஓட்டுநர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்து பாரத ஸ்டேட் வங்கி முன்பாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென பெரியமணியந்தல் கிராமத்தில் வசிக்கும் பன்னீர்செல்வம் என்பவர் வழிமறித்துள்ளார். அதன்பின் பேருந்தில் ஏறி ஓட்டுனரிடம் தகராறு செய்து நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதைக் கண்டு பேருந்தில் இருந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மளிகை கடையில் புகையிலையா…. சோதனையில் தெரிந்த உண்மை…. வருவாய்த் துறையினரின் செயல்….!!

புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்த மளிகை கடையை வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் இருக்கும் மளிகை கடையில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து கடை உரிமையாளரான ஏழுமலை என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 85 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் மளிகை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

என்னால வாழ முடியல…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மன உளைச்சலால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பு.கொணலவாடி பகுதியில் தவமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தவமணி தனது வீட்டில் திடீரென விஷம் குடித்து விட்டு மயங்கிக் கிடந்துள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தவமணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உடல் நலம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காணாமல் போன மாணவி…. அச்சத்தில் இருக்கும் பெற்றோர்…. போலீஸ் விசாரணை….!!

நர்சிங் கல்லூரி மாணவி காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடகுரும்பூர் கிராமத்தில் 19 வயது மாணவி தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் மலைக்கோட்டாலம் பகுதியில் வசிக்கும் தனது தாத்தாவை சந்தித்து விட்டு கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. ஆதலால் இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“தண்ணீர் எடுத்துட்டு வரேன்” விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நெடுமுடையான் கிராமத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மூன்று நபர்களுடன் தனது நிலத்தில் வேலை செய்துள்ளனர். அதன்பின் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது குடிநீர் தேவைப்பட்டதால் வயலில் இருக்கும் கிணற்றில் ஐயப்பன் தண்ணீர் எடுத்து வருவதாக உடன் வேலை செய்பவர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் ஐயப்பன் திரும்ப வராத நிலையில் சந்தேகமடைந்த சக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 27,99,000…. சிறப்பாக நடைபெற்ற ஏலம்…. விவசாயிகள் மகிழ்ச்சி….!!

வாரந்தோறும் நடைபெறும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி முட்டைகள் ஏலம் விடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் தவறாமல் புதன்கிழமை அன்று பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. இந்நிலையில் தற்போது நடைபெற்ற பருத்தி சந்தையில் 240 விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் உற்பத்தி செய்த பொட்டு ரக பருத்தி 549 மூட்டைகள் மற்றும் எல்.ஆர்.ஏ ரக பருத்தி 64௦ மூட்டைகள் என மொத்தமாக 1,089 பருத்தி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

என் பொறுப்பில் தான் இருக்கு…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அறுவடை இயந்திரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வி. அலம்பலம் கிராமத்தில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் அறுவடை இயந்திரத்தை வரதன் தனது பொறுப்பில் ரவி என்பவரின் நிலத்தில் நிறுத்தி வைத்திருந்திருக்கிறார். அப்போது விஜயகுமார் என்பவர் ரவியின் நிலத்தில் இருந்த நெல் அறுவடை இயந்திரத்தை எடுத்துச் செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது வரதன் இயந்திரத்தை ராமர் எனது பொறுப்பில் விட்டு சென்று இருப்பாதாகவும், அவர் திரும்பி வந்ததும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஊக்கத்தொகை வழங்க வேண்டும்…. பணியாளர்கள் போராட்டம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

ஊக்கத் தொகையை வழங்க கோரி நீர்த்தேக்க தொட்டி பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்திருந்த 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையை வழங்க கோரி கிராம ஊராட்சிகளில் வேலை பார்க்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் பணியாளர்கள், காவலர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் மாநில இணை செயலாளர் கனி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு ஆகியோர் கண்டன உரையாற்றி உள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாலையில் கிடந்த கால்நடை மருந்து…. சிகிச்சையில் இருக்கும் சிறுவர்கள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

கால்நடை மருந்தை சப்பிட்ட 8 சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நல்லாத்தூர் கிராமத்தில் வசிக்கும் சிவமணி உள்பட 8 சிறுவர்கள் காமராஜர் நகர் பகுதியில் விளையாடி கொண்டிருக்கும் போது சாலையோரத்தில் சர்க்கரை போன்ற வெள்ளை நிற பொருள் கீழே கொட்டி கிடந்ததை பார்த்த அவர்கள் அதை போட்டி போட்டு அள்ளி சாப்பிட்டுள்ளனர். அதன்பின் சிறுவர்கள் திடீரென வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவர்களின் பெற்றோர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உயிர் பிழைத்த குரங்கு…. வைரலாகும் வீடியோ காட்சி…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

சாலையில் அடிபட்டு கிடந்த குரங்கின் உயிரை காப்பாற்றிய நபரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் செம்பாகுறிச்சி மற்றும் அனுமனந்தல் ஆகிய கிராம எல்லைப்பகுதியில் வீ. கிருஷ்ணாபுரம் காப்புக்காடு அமைந்திருக்கிறது. இங்கு இருக்கும் குரங்குகளுக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பழங்கள் மற்றும் உணவுகளை வழங்கி செல்கின்றனர். இதனால் உணவுக்காக குரங்குகள் காப்பு காட்டை விட்டு வெளியேறி தேசிய நெடுஞ்சாலையில் சுற்றி திரிவதை காணமுடிகின்றது. இதனையடுத்து சாலையில் சுற்றி திரிந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுவதற்காக ஊறலை பதுக்கி வைத்திருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருக்கும் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக 6 பேரல்களில் 2000 லிட்டர் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த சாராய ஊழலை காவல்துறையினர் கீழே கொட்டி அழித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகன், மணிவிளக்கு மற்றும் ரவிச்சந்திரன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பழுதடைந்த மின்மாற்றி…. விவசாயிகள் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்க கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழையூர் பகுதியில் இருக்கும் மின்மாற்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பழுதடைந்துள்ளது. இதை சீரமைக்க கோரி அப்பகுதி விவசாயிகள் பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இருப்பினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பழுதடைந்த மின்மாற்றியின் கீழே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“மொத்தம் 500 லிட்டர்” அதிரடி வேட்டை…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி கீழே கொட்டி அழித்துள்ளனர். இது சம்பந்தமாக அதே பகுதியில் வசிக்கும் தங்கராசு என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

22 நபர்கள் மீது வழக்குப்பதிவு….. கொலை மிரட்டல் விடுத்த கும்பல்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

நிலப் பிரச்சனை காரணத்தால் தகராறில் ஈடுபட்ட 22 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கீழையூர் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற தங்கை உள்ளார். இந்நிலையில் இவரின் தங்கை குடும்பத்திற்கும் கக்கன் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த கக்கன் உள்பட 3 பேர் சேர்ந்து சுதாகரை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெட்டிக்கடையில் புகையிலை விற்பனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெட்டிக் கடையில் வைத்து புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கீழையூர் பகுதியில் இருக்கின்ற பெட்டிகடையில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு விற்பனைக்காக புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து இது சம்பந்தமாக கடை உரிமையாளரான துரை என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 10 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீர் சோதனை…. வசமாக சிக்கிய உரிமையாளர்…. போலீஸ் நடவடிக்கை….!!

புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் ரோட்டில் அமைந்திருக்கும் மண்ணாங்கட்டி என்பவரின் பெட்டிகடையில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் 11 புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இது சம்பந்தமாக கடை உரிமையாளரான மண்ணாங்கட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 16 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வியாபாரிகள் சங்க கூட்டம்…. புதிதாக நிர்வாகிகள் தேர்வு…. அதிகாரிகள் பங்கேற்பு….!!

தனியார் மண்டபத்தில் வைத்து அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் 2022-ஆம் வருடத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இவற்றில் பொருளாளராக கோகுல்ராம், செயலாளராக ராஜாராம் மற்றும் தலைவராக செல்வராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் ஒருங்கிணைப்பாளர் டைமன்ராஜா வெள்ளையன் கூறியதாவது, புகையிலைப் பொருட்கள் மூலமாக சிறு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எல்லாமே போச்சு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி மன உளைச்சலில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூவாகம்நத்தம் கிராமத்தில் குமாரவேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேபிள் டிவி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அதன்பின் இதற்கு குமாரவேலு அடிமையாகி இருந்த நிலையில் பணத்தையும் அதிக அளவில் இழந்து வந்திருக்கிறார். இதனையடுத்து ரம்மி சூது விளையாட்டில் இருந்து மீள முடியாத அவர் உறவினர்கள் மற்றும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஏன் அணியவில்லை…. ஓட்டுனர்களுக்கு அபராதம்…. போலீஸின் செயல்….!!

இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமல் வந்த நபர்களுக்கு காவல்துறையினர் 50 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் முககவசம் அணியாமல் வந்த 50 நபர்களுக்கு காவல்துறையினர் தலா 50 ரூபாய் அபராதம் விதித்து வசூல் செய்துள்ளனர். இதனை அடுத்து வாகன ஓட்டுனர்களுக்கு காவல்துறையினர் அறிவுரை கூறி முககவசம் வழங்கியுள்ளனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கோழி கடையில் இதுவும் விற்பனையா…. வசமாக சிக்கிய உரிமையாளர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கோழி கடையின் பின்புறத்தில் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செட்டிதாங்கல் பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோழி கடையின் பின்புறமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் மதுபாட்டில்களை விற்பனை செய்த ரகு என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நண்பனுக்கு கத்தி குத்து…. வாலிபர் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!

தன்னை வேலைக்கு அழைத்து செல்லாத காரணத்தினால் நண்பனை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் மெயின் ரோடு பகுதியில் சிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கொத்தனார் மேஸ்திரி சுமன் என்பவரும் இவரும் தொழில் ரீதியாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இதனால் இருவரும் வேலைக்கு சேர்ந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் நண்பர் சுமனை கொத்தனார் வேலைக்கு சிராஜ் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சந்தேகமா இருந்துச்சு…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் வலைவீச்சு….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புறவழிச்சாலை மேம்பாலத்திற்கு கீழ் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 வாலிபர்களை காவல்துறையினர் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது அதில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். அதன்பின் மீதமிருக்கும் 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் கஞ்சா வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவர்களை தொடர்ந்து விசாரணை செய்ததில் அவர்கள் ரமேஷ் சதிஷ்குமார் மற்றும் 18 வயது சிறுவன் என்பது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தகவல் வந்துச்சு…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கட்டகோபுர வீதி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதே பகுதியில் வசிக்கும் பாலாஜி மற்றும் கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 40 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நகர்ப்பகுதிகளில் திருக்கோவிலூர் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதிகளில் பாலா மற்றும் ஆதி ஆகிய 2 நபர்கள் சட்ட விரோதமாக லாட்டரிச் சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 28 லாட்டரி சீட்டுகளையும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர கண்காணிப்பு பணி…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஏமப்பேர் புறவழிச்சாலை பகுதியில் காவல்துறை சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின் படி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரிடம் இரண்டு பேர் கஞ்சா வாங்கி உள்ளனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் குமரேசன், கோபாலகிருஷ்ணன் மற்றும் 18 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. இதனை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெட்டிக்கடையில் புகையிலை விற்பனை…. வசமாக சிக்கிய உரிமையாளர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக பெட்டி கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகாமையிலிருக்கும் பாடியந்தல் கிராமத்தில் இருக்கின்ற பெட்டிகடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கடை உரிமையாளரான ராஜரத்தினம் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 260 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கீழையூர் மாரியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கஞ்சா விற்பனை செய்த ஹரிஹரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சைலோம் மாரியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த தாவீதுராஜா என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சந்தேகமா இருந்துச்சு…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கெடிலம் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள் உளுந்தூர்பேட்டை அருகாமையிலிருக்கும் ஆத்தூர் கிராமத்தில் வசிக்கும் பாண்டியன், சஞ்சீவ் மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இவர்கள் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பாதுகாப்பாக கொண்டாட வேண்டும்” சிறப்பாக நடைபெற்ற கூட்டம்…. ஆட்சியரின் உத்தரவு….!!

பொதுமக்களுக்கு பண்டிகைகளை பாதுகாப்பான முறையில் கொண்டாட விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பற்றி வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் கூட்டத்தில் இந்த மாதத்தில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் மற்றும் சாலை விபத்துக்கள் பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் கேட்டறிந்துள்ளார். இதில் இனி வரும் […]

Categories

Tech |