ஆஸ்திரேலியாவில் மீன் பிடிக்க வந்த தம்பதியினர் இருவரையும் பசியோடிருந்த முதலை ஒன்று அச்சுறுத்தி மீனை விழுங்கிய காட்சிகள் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் இருக்கும் கஹில்ஸ் கிராசிங் என்ற இடத்தில் உள்ள கக்காடு (Kakadu) தேசியப் பூங்காவில் கணவன் மனைவி இருவரும் ஆற்றங்கரையில் மீன் பிடிக்கச் சென்றனர். இருவரும் நீண்ட நேரமாக தூண்டிலை போட்டு மீனுக்கு காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் மீன் மாட்டவே இல்லை. இறுதியாக ஒரு வழியாக அவர்களில் மனைவிக்கு மீன் ஒன்று தூண்டிலில் சிக்கியது. இதனை மெதுவாக அவர் வெளியே இழுத்தார். […]
