ஆப்கானிஸ்தானில் இன்று தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதல்களில் 18 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் வருகின்ற செப்டம்பர் மாதம் 28_ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் அம்ருல்லா சாலேவின் அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 24 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதையடுத்து நேற்று அங்குள்ள தலிபான் தீவிரவாத அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இங்கு நடக்க இருக்கும் தேர்தல் மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் ஒரு நாடகமாகும். பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.இந்த நாடகத்தனமான […]
