இப்போதைய காலகட்டத்தில் நாம் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கொரோனா பாதிப்புக்கு பின் நாம் முதலில் திறக்க வேண்டியது பள்ளி கல்லூரிகளை தான். மற்றவர்களை காட்டிலும் மாணவர்கள் […]
