அமைச்சர் கருப்பணனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கும் கட்சி பாகுபாடின்றி நிதியைப் பங்கிட்டு ஒதுக்கீடு செய்யப்படும்’ என உறுதிபடத் தெரிவித்தார். ஈரோடு சத்தியமங்கலம் அடுத்த காவிலிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா […]
