என்கவுன்டரில் கொல்லப்பட்ட நால்வரின் உடல்களை பதப்படுத்தி பாதுகாத்து வைத்திட ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த திஷா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக லாரி ஓட்டுநர், கிளீனர் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட நால்வரையும் நேற்று ஹைதராபாத் காவல்துறையினர் என்கவுன்டர் செய்தனர். என்கவுன்டர் சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து எடுத்துக் கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டது. இதுகுறித்து பல்வேறு […]
