கொரோனா தொற்று காரணமாக வேலை இழந்த டிரைவர் மின்கம்பத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கனகவள்ளிபுரம் கிராமத்தில் ஜேக்கப் ஜெயசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தனியார் டிராவல்ஸில் ஓட்டுநராக பணிபுரிந்த ஜெயசீலனுக்கு கொரோனா தொற்றால் வேலை இல்லாமல் போனது. இதனால் ஜேக்கப் தனது குடும்பத்தினருடன் கடம்பத்தூரில் இருக்கும் தனது உறவினர் […]
