கூட்டநெரிசலாக இருக்கும் பேருந்தில் நகை,பணம் போன்றவற்றை திருடிய குற்றத்திற்காக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியர் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். கடந்த மாதம் 4-ஆம் தேதி பாலசுப்பிரமணியம் தனது மனைவி பிரேமாவுடன் சேலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இவர்கள் சீலநாயக்கன்பட்டியிலிருந்து சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்தில் வந்து கொண்டிருந்த போது தம்பதிகள் வைத்திருந்த 12 […]
