ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரியசூரியூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் புகழ்பெற்றதாகும். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 480 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் வந்தனர். இந்நிலையில் பள்ளி கல்வி துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து போட்டியில் கலந்து […]
