Categories
தேசிய செய்திகள்

விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கிய சம்பவம்:: தேசிய பேரிடர் மேலாண்மையுடன் மோடி ஆலோசனை..!

விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சம்பவம் தொடர்பாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். ஆலோசனையை தொடர்ந்து, விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு தொடர்பாக ஆந்திர முதல்வருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என பிரதமர் உறுதி அளித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 2,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை… ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை… ஆந்திர அரசு அதிரடி!

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் யாராவது ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்படவுள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இன்று  அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் நிறைவடைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நானி, அடுத்த மாதம் (மார்ச்) 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் சில திருத்தங்களை […]

Categories
தேசிய செய்திகள்

பஸ் யாத்திரா செல்ல முயன்ற சந்திரபாபு நாயுடு கைது.!!

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பஸ் யாத்திரா மேற்கொள்ளவிருந்த முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உருவாக்கிய ஜி.என். ராவ் குழு ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்களை உருவாக்க வேண்டும் என அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் பிரிக்கப்பட ஆலோசனை செய்யப்படும் என்று கடந்த டிசம்பர் 17ஆம் தேதி ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருந்தார். ஆனால், அமராவதியை தலைநகராக்கும் திட்டத்திற்காக நிலங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டி” ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த ராகுல்..!!

ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றதற்கு ராகுல் காந்தி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்   மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிக்கும்  தேர்தல் நடைபெற்றது. இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. ஆனால் சந்திரபாபு நாயுடுவின் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வென்று படுதோல்வியடைந்தது. சட்ட மன்ற தேர்தலில் வென்றதையடுத்து ஜெகன் மோகன் ரெட்டிக்கு தெலுங்கானா ஆளுனர் நரசிம்மன்  பதவி பிரமாணம் செய்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பதவியேற்பு…!!

ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டிக்கு  ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்   மக்களவை தேர்தலுடன் சேர்த்து நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி  வருகின்ற 30_ஆம்  தேதி பிற்பகல் 12.30 மணிக்கு விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற ஜெகன் மோகன் ரெட்டி…!!

டெல்லியில் பிரதமர் மோடியை YSR காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.   நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. இந்த தோல்வியையடுத்து ஆந்திர மாநில முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டியை ஆட்சி அமைக்க […]

Categories

Tech |