சபரிமலை கோவில் மண்டல மகரவிளக்கு பூஜையானது நாளையுடன் நிறைவடையும் நிலையில் பக்தர்களுக்கு இன்று மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் களபாபிஷேகம் நடந்தது. இந்த விழாவானது கண்டரரு ராஜீவரு தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதிகள் சுரேஷ் குமார் வர்மா மற்றும் பிரதீப் வர்மா போன்றோர் பங்கேற்றனர். இதனையடுத்து வழக்கமான பாரம்பரிய முறைப்படி தந்திரி, மேல்சாந்தி மற்றும் கீழ் சாநதிகளுக்கு மன்னர் குடும்ப பிரதிநிதிகள் பணமுடிப்புகளை […]
