Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“வெளிநாட்டில் வேலை” ஆசை காட்டி ரூ40,00,000 மோசடி… மனமுடைந்த வாலிபர் தற்கொலை..!!

காரைக்குடி அருகே வெளிநாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்புவதாக கூறி 40 லட்சம் ரூபாய் ஏமாற்றிய நபர் மீது விக்னேஷ் என்பவர் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். காரைக்குடியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் தேவகோட்டை மங்கல குடியைச் சேர்ந்த முகவர் அபூபக்கர் மூலம் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வந்துள்ளார். 30க்கும் மேற்பட்டோர்க்கு வேலை வாங்கிக் கொடுத்ததால் அவரை முழுவதுமாக நம்பிய விக்னேஷ் மேலும் 40க்கும் மேற்பட்டோரிடம்பணம் வசூலித்து ரூ40 லட்சம் ரூபாய் அபூபக்கரிடம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லை தம்பதி வழக்கு” குற்றத்தை ஒத்துக்கொள்… மிரட்டும் காவல்துறை… ஊர்மக்கள் பகீர் குற்றசாட்டு..!!

நெல்லை வீர தம்பதியினர் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க முடியாததால் குற்றத்தை ஒத்துக்குமாரு காவல்துறையினர் மிரட்டுவதாக ஊர்மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். நெல்லை மாவட்டம் கடையம் முதிய தம்பதியை தாக்கி கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 15 நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.  கொள்ளையர்களை கைது செய்வதற்கு பதிலாக தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று காவல்துறையினர் மிரட்டுவதாக கல்யாணபுரம் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும்  உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் பரபரப்பு…காதல் தோல்வியால் தூக்கில் தொங்கிய மாணவன்…!!

கோவை வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நேபாள நாட்டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மருதமலை சாலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் சர்வதேச மாணவர்களுக்கான விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு தங்கி பயின்று வந்த நேபாள நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து விடுதிக் காப்பாளர் கணேசன் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாணவனின் உடலை கைப்பற்றி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வைக்கக்கூடாத இடத்தில் தங்கம்… ஆடைகலைந்து சோதனை… ரூ37,00,000 பறிமுதல்..!!

திருச்சி விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் ரூ37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருச்சி விமான நிலையத்தில்  நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரி பண்டாரம் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது திட்ட குடியைச் சேர்ந்த அன்பழகன் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த பழனியப்பன் உள்ளிட்டோர் சந்தேகிக்கும் வகையில் நடந்து கொண்டதால், அவர்களை  தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“இந்தியா to இலங்கை” கடத்தல் முயற்சி… ரூ10,00,000 மதிப்புள்ள கடல் அட்டைகளை பறிமுதல்..!!

ராமேஸ்வரத்தில் மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 829 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  ராமநாதபுர மாவட்டம் ராமேஸ்வரத்தில் பாம்பன் கடல் பகுதியில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக இலங்கைக்கு கடல் அட்டை கடத்தப்படுவதாக கடல் வளம் சார்ந்த  சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று இரவு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பாம்பன் பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமாக இருந்த நாட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மக்களே உஷார்” ஆட்டோவில் வலம் வரும் செல்போன் திருடர்கள்..!!

சென்னை ராயபுரத்தில் 2 செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். எண்ணுரை சேர்ந்த ஸ்ரீநிவாஸன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து எண்ணுறை  நோக்கி சென்ற மாநகர பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது அவரின் செல்போனை இளைஞர் ஒருவர் திருட முயன்றுள்ளார். இதனை ஸ்ரீனிவாசன் கவனித்ததால் அவரது கையை அந்த இளைஞர் கத்தியால் வெட்டி விட்டு செல்போனை பறித்துக்கொண்டு பேருந்திலிருந்து கீழே இறங்கி, ஆட்டோவில் கூட்டாளிகளுடன் தப்பிச் சென்றார். இதற்கிடையே ராயபுரம் மேம்பாலம் அருகே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ரூ44,00,000 தங்கம்” மலக்குடலுக்குள் வைத்து கடத்தல்… சோதனையில் முகம் சுழித்த காவலர்கள்..!!

சென்னை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட சுமார் 44 லட்சம் மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மலேசியா கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து இறங்கிய பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அப்துல் ரகுமான் மற்றும் இப்ராகிம் இஷா ஆகிய இரு பயணிகள் நடுக்கத்துடன் நின்றுகொண்டிருப்பதை பார்த்து சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களை  அழைத்துச் சென்று உடமைகளை சோதனையிட்டனர். அதில், அவர்கள் இருவரும் மலக்குடலில் தங்கத்தை மறைத்துக்கொண்டு வந்தது தெரியவந்தது. மேலும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரூ38,00,000 மோசடி வழக்கில் மதுரை தொழிலதிபர் கைது..!!

மதுரையில் பார் நடத்த அனுமதி வழங்கியதில் 38 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தனியார் வணிக வளாக உரிமை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியில் உள்ள விஷால் டி மால் என்ற வணிக வளாகத்தில் பார் நடத்த சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சந்திரசேகரன் முன்பணமாக 68 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் வணிக வளாகத்தில் பார் நடத்தி வந்த சந்திரசேகருக்கு நஷ்டம் […]

Categories
Uncategorized

ரூ20,00,000 போதைப்பொருள் பறிமுதல்… தனிப்படை போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சென்னை அருகே பெருங்களத்தூரில் 2 மினி வேன்களில் கடத்தப்பட்ட 20 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டது.  சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்டிங் ஆப்ரேஷன் என்ற பெயரில் தனிப்படை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு மினி வேனை நிறுத்தி சோதனையிட்டதில், 1338 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக பெருங்குளத்தூரை  சேர்ந்த பிரகாஷ், முகமது ஆசாத் திருவண்ணாமலையைச் சேர்ந்த அருண்குமார் ஆகிய 3 பேரை காவல்துறையினர் […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

விற்பனையை தடுப்பீங்களா..?? பொதுமக்களுக்கு சரமாரி வெட்டு… கஞ்சா வியாபாரி வெறிச்செயல்..!!

காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனையை  தட்டிக்கேட்ட பொதுமக்களை கஞ்சா வியாபாரி சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் புருஷோத்தமன் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இவரது கஞ்சாவிற்கு  பல இளைஞர்கள் அடிமையாகி வந்துள்ளனர். இதனால் பலரது குடும்பங்களும் பிரிந்த நிலையில் ஒரு சிலர் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டனர்.  இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்றைய தினம் கஞ்சா வியாபாரியான புருஷோத்தமனை தட்டி கேட்க நினைத்து பின் ஒன்றுகூடி விரட்டி […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

பெரிய கோவிலை அத்துமீறி வீடியோ எடுத்த ஆளில்லா விமானம்… போலீசார் விசாரணை..!!

தஞ்சை பெரிய கோவிலை ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சையை ஆட்சி செய்த ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலமாகவும் இருக்கும் பெரிய கோவிலில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டு குடமுழுக்கு திருவிழா நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான வேலைகளில் இந்து சமய அறநிலை துறை ஈடுபட்டுள்ளது. கோவில் பிரகாரத்தில் நடைபாதையை […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

“இளைஞர் மீது பொய் வழக்கு” காவல்நிலையத்தை முற்றிகையிட்ட அரசியல் கட்சிகள்..!!

புதுச்சேரியில்  உள்ளூர் இளைஞர்   மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். புதுசேரி, வீராம்பட்டினம் கடற்கரை அருகே உள்ள அய்யம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ். இவர் அவர் வீட்டிற்கு அருகே இருக்கக்கூடிய கடற்கரை பகுதியில் வடமாநில இளைஞர்கள் சிலர் மது அருந்தியதாகவும், இதனை தினேஷ் தட்டிக் கேட்ட தாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் வடமாநில இளைஞர்களிடம் விசாரணை செய்யாமல், தினேஷை தாக்கி அவர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“பற்றி எறிந்த கொட்டகை”கருகிய நிலையில் 32 கால்நடைகள்… ஊர்மக்கள் கண்ணீர் மல்க வேதனை..!!

கடலூர் மாவட்டம் அருகே ஆட்டுக் கொட்டகை தீப்பிடித்து எரிந்ததில் 32 கால்நடைகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள ஆழிகிராமத்தைச் சேர்ந்த கொலஞ்சி என்பவர் தனக்கு சொந்தமான ஆட்டுக் கொட்டகையில் 30 ஆடுகள் 2 பசுங்கன்று குட்டிகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் இந்த ஆட்டு கொட்டகைக்கு தீ வைத்துள்ளனர். இதில் உள்ளே இருந்த கால்நடைகள் அனைத்தும் தீயில் கருகி உயிரிழந்தனர். இதையடுத்து தீயணைப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வெடிகுண்டு பதுக்கல்”முன் ஜாமீன் கிடையாது… வசமாக சிக்கிக்கொண்ட MLA ..!!

பீகாரில் AK 47 துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் சரணடைய உள்ளதாக எம்எல்ஏ ஆனந்த குமார் சிங் வீடியோ வெளியிட்டுள்ளார். பீகார் மாநிலம் பாட்னா தொகுதியில் சுயேச்சை எம்எல்ஏவான ஆனந்த குமார் சிங் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கபட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு விரைந்த காவல்துறையினர் ஆனந்த் சிங் வீட்டிலிருந்து ஏகே47 கையெறி குண்டு உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர். சோதனை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஹோட்டலில் கொலை செய்த மர்மநபர்கள் … பயத்தில் காவல்துறையில் சரண் ..!!

திருத்தணியில் உணவகத்தில் வைத்து இளைஞர் வெட்டிக் கொலை செய்த வழக்கில் 4 பேர்  காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்  மகேஷ். இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று பட்டா பட்டிகளுடன் வந்த கும்பலினால்  ஓட ஓட விரட்டப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் திருத்தணி முருகன் கோவிலின் அடிவாரத்தில்  உள்ள உணவகத்தில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார் .   பின்னர் கொலையை செய்த மர்ம நபர்கள் அங்கிருந்து  தப்பி ஓடினர் . அதன்பின் காவல் துறையினர் கொலையாளிகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”திருமணம் செய்து கொள்கின்றேன்” மோசடி செய்த நடிகையிடம் விசாரணை…!!

திருமண மோசடி வழக்கில் சிக்கிய நடிகை ஸ்ருதியிடம் கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்னும் திரைக்கு வராத ”ஆடி போனா ஆவணி” படத்தில் நடித்துள்ள நடிகை சுருதி சமூக வலைதளத்தின் அவருக்கு மணமகன் தேடுவதாக போட்டோவை பதிவிட்டு விளம்பரம் செய்துள்ளார். இதை கண்ட பலரும் அவரை தொடர்பு கொண்டு நெருங்கி பேசியுள்ளனர். அப்போது தண்ணனிடம் நெருங்கி பேசுபவர்களிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியதுடன் , பல்வேறு காரணங்களை சொல்லி பண மோசடி செய்துள்ளார். இப்படி […]

Categories
உலக செய்திகள்

‘1 ஆள்’ ‘3 துப்பாக்கி’ 11 காவல் அதிகாரிகளை சுட்டு வீழ்த்திய கடத்தல்காரன்..!!

அமெரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த காவல்துறையினர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.  அமெரிக்கா, பிலடெல்பியாவையடுத்த குடியிருப்பு பகுதியில் போதை கடத்தல் கும்பல் நடமாட்டம் காணப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது கடத்தல்காரன் ஒருவன் வீடு ஒன்றில் வெளியே நிறுத்தப்பட்ட லாரி மீது துப்பாக்கியால் சுட்டு குடியிருப்புவாசிகளை அச்சுறுத்தி உள்ளான். மேலும் அவனது கையில் AK47 துப்பாக்கி , செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பணம் தர மறுப்பு… டாஸ்மார்க் ஊழியரை கத்தியால் குத்தி கொன்ற கொள்ளையன்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரை கடைக்குள் புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக்கடையில் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த ராஜா என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். புதன்கிழமை இரவு கடையை மூடிவிட்டு விற்பனையான பணத்துடன் வீட்டிற்கு திரும்பிச் சென்ற ராஜாவை கடையை மூடவிடாமல் வழிமறைத்து மர்ம நபர்கள் கடைக்குள் நுழைந்தனர். பின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருப்பதி சென்ற தம்பதி… “41சவரனுக்கு நாமம்” கைவரிசையை காட்டிய திருடர்கள்..!!

திருவண்ணமலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஊழியர் வீட்டில் 41 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் ஊராட்சியில் இருக்கக்கூடிய மாரியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் ஏழுமலை என்பவர் அப்பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் குடும்பத்துடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற போது, வீட்டில் ஆள் இல்லாததை உறுதி செய்து கொண்ட மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 41 சவரன் தங்க […]

Categories
தேசிய செய்திகள்

விளையாட்டால் விபரீதம் … மின்சாரம் தாக்கி 3 சிறுவர்கள் பலி ..!!

ஆந்திராவில் விளையாடிக்கொண்டு இருந்த மூன்று சிறுவர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர் .  ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கோப்பரா  கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சகோதரர்களான ஷேக் அதான், ஷேக் காசிம் மற்றும் அவரது நண்பர் என் பதான் அமீர் ஆகியோர் அந்த பகுதியின்  கொடிக் கம்பத்தை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது , திடீரென அந்த கம்பத்தின் அசைவு அதிகமாகி அருகில் இருந்த மின்சார கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி அம்மூவரும் தூக்கி எறியபட்டனர் […]

Categories
தேசிய செய்திகள்

1000 ரூபாய் … 7 மாத குழந்தை … அதிரடி ஆஃபர் அளித்த தாய் ..!!

தெலுங்கானாவில் பஸ் நிலையத்தில் 1,000 ரூபாய்க்கு விற்க முயன்ற 7 மாத பெண் குழந்தையை  காவல்துறையினர் மீட்டனர். தெலுங்கானா மாநிலத்தில் ஜனகாம்ப மாவட்டம் தென்பருத்தி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் பிறந்து ஏழு மாதமேயான பெண் குழந்தையுடன் பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தார் . அப்போது அவர் குழந்தையை ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயன்றதாக கூறப்படுகிறது. உடனே அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தெரிவித்தனர் .   அதன்பின் காவல்துறையினர் விரைந்து சென்று குழந்தையை மீட்டு குழந்தைகள் நல அதிகாரியிடம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அவுட்டிங் சென்ற காதலர்கள் … புழல் சிறையில் அடைத்த காவலர்கள் ..!!

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற காதலனும் காதலியும் செல்போன் பறிப்பில்  ஈடுபட்டதால் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.  சென்னையில் தேனாம்பேட்டை காவல்நிலைய எல்லையில் ஜிஎம் சிட்டி சாலையில் சன்கிளாஸ் அருகில் பிரசன்னா லிப்சா என்பவர் தனது தோழியுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் செல்போனை அவரிடம் இருந்து பறித்துச் சென்றனர். அதன்பின் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இருபெண்களும்  புகார் அளித்தனர் . இந்நிலையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

71/2 பவுன் செயின் பறிப்பு… கோலம் போட்ட பெண்ணுக்கு நடந்த விபரீதம்..!!

நாமக்கல்லில் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து ஏழரை சவரன் தாலி செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  . நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த  சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் தனியார் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். திருமணமான இவருடைய மகள் சங்கீதா பிறந்த வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில்  இன்று அதிகாலை வீட்டின் முன் பகுதியில் கோலம் போட்டு கொண்டிருந்தார்.  அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு” … கொள்ளையருக்கு காவல்துறையினர் வலைவீச்சு ..!!

சென்னையில் தனியாக நடந்து சென்ற   பெண்ணிடம் செல்போனை பறிக்க முயன்ற கொள்ளையர்களை  காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னையில் எர்ணாவூர் ஜெய்ஹிந்த் நகரைச் சேர்ந்தவர் வாணி . இவர் மளிகை கடைக்கு சென்று விட்டு செல்போன் பேசியபடி தனியாக சாலையில்   நடந்து சென்றார் . அப்போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த இரண்டு கொள்ளையர்கள் வாணியின் செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால் , கொள்ளையரிடம்  செல்போன் சிக்கவில்லை .   அப்போது வாணி நிலைதடுமாறி கீழே […]

Categories
தேசிய செய்திகள்

ஆத்தாடி இவ்ளோவா விடுதி கட்டணம் … தப்பி ஓடிய தொழிலதிபர் ..!!

தாஜ் பஞ்சாரா  விடுதியில்  102 நாட்கள் தங்கிவிட்டு கட்டணத்தை செலுத்தாமல் சென்றதால் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் சங்கர் நாராயணன் . இவர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தாஜ் பஞ்சாரா நட்சத்திர  விடுதியில் தங்கி  இருந்தார் . அவ்விடுதியில் இவர் 102 நாட்கள் தங்கியிருந்ததோடு விடுதியின் சேவைகளையும் அனுபவித்து வந்தார் . பின்னர் 26 லட்சம் கட்டணம் செலுத்துமாறு விடுதி நிர்வாகம் அவரிடம் ரசீதை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிசிடிவி காட்டி கொடுத்ததால் காவல்துறையிடம் மாட்டிக் கொண்ட திருடர்கள் ..!!

ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்து நகையை பறித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர் சென்னை அமைந்தகரை கரன்ட்ரைட் காலணியைச் சேர்ந்த உஷா என்பவர் நேற்று இரவு கடைக்குச் சென்று வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் உஷாவின் கழுத்தில் இருந்த 7 சவரன் நகையை பறித்துதனர் . உடனே உஷா சத்தம் போட ஆரம்பித்தார் . இதனால் கொள்ளைக்காரர்கள் உஷாவை தள்ளிவிட்டு வாகனத்தில் தப்பிச் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காரில் போதை மாத்திரை விற்பனை … மடக்கி பிடித்த காவல்துறையினர் ..!!

பேரையூர் அருகே காரில் சென்ற கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த மூன்று  பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இக்காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் போதை பொருளுக்கு அடிமையாகி கொண்டு வருகின்றனர். இதனால் சமூகம்  சீர்கெட்ட நிலையை அடைந்து வருகிறது. இந்நிலையில் பச்சாபாளையம் அருகே ஒரு கும்பல் காரில் வந்த கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதன்பின் எஸ்பி சுஜித் குமார் உத்தரவின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

துப்பாக்கியால் மிரட்டும் வழிப்பறி கும்பல்… அதிரடியாக கைது செய்த காவல்துறை..!!

விழுப்புரத்தின் கிழக்கு கடற்கரை சாலையில் துப்பாக்கியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் அப்பகுதி காவல்துறையினர் கிழக்கு கடற்கரை சாலை ஓரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சிவா என்ற நபரை மர்ம நபர்கள் இரண்டு பேர் வழிமறித்து துப்பாக்கியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குளியலறையில் அடித்துக் கொல்லப்பட்டுக் கிடந்த பெண்…..!!!!

பிங்கி என்ற மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் குளியலறையில் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் கிடந்தார்.  மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிங்கி என்ற பெண் தனது கணவரை பிரிந்து கிருஷ்ணபகதூர் என்பவருடன் சென்னையிலுள்ள அண்ணா நகரில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார். டாட்டூ வரைதல், சேலை விற்பனை போன்ற  தொழிலை செய்து வந்த நிலையில், பிங்கி நேற்றிரவு வீட்டு குளியலறையில் கொல்லப்பட்டு கிடந்தார். இது குறித்து திருமங்கலம் போலீசாருக்கு கிருஷ்ணபகதூர் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அடித்து […]

Categories
மாநில செய்திகள்

மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் திருப்பி அனுப்பப்பட்டார் !!..

இந்தியாவிற்குள்  சட்டவிரோதமாக  நுழைய  முயன்ற  முன்னாள்  துணை அதிபர் அவரது  சொந்த நாட்டிற்கு  திருப்பி அனுப்பப்பட்டார் . மாலத்தீவிற்கு  கருங்கல்  இறக்கிவிட்டு தூத்துக்குடி  பழைய  துறைமுகத்திற்கு  திரும்பிய  விர்கோ  என்ற இழுவை  கப்பலில் மாலத்தீவு  முன்னாள்  துணை  அதிபர்  அகமது  அதீப்  சட்டவிரோதமாக  நுழைந்தார்  . இந்த  இழுவை  கப்பல்  நடுக்கடலில்  வந்தபோது  நேற்று  முன்தினம்  அதிகாலை  தூத்துக்குடி  கடலோர  காவல்  படையினர்  மறித்து  சோதனை       செய்தனர் . அதில்  மாலத்தீவின்  முன்னாள்  துணை  அதிபர்  […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

திருட வந்த என்னை ஏமாற்றிவிட்டீர்கள்… மனமுடைந்த திருடன் கடைக்காரருக்கு கடிதம்..!!

கடலூர் மாவட்டம் மேகலையில் திருடன் ஒருவன் தனது ஆதங்கத்தை கடிதமாக எழுதி வைத்து சென்றுள்ளான். வேலூர் மாவட்டம் மேகலை பகுதியை அடுத்த நந்தவனத்தில் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். அவரது கடையில் நேற்று திருட வந்த திருடன் ஒருவன் செய்த காரியம் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் கடையை பூட்டி செல்லும் பொழுது கடை உரிமையாளர் கல்லாப் பெட்டியில் உள்ள அனைத்து பணங்களையும் எடுத்து வீட்டிற்கு கொண்டு சென்று விடுவார். அதேபோல் அன்றைக்கும் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

பைக் திருடும் இளைஞர்… காட்டி கொடுத்த சிசிடிவி.. போலீஸ் வலைவீச்சு..!!

புதுச்சேரியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வரும் இளைஞரை சிசிடிவி காட்சிகளின் உதவியோடு காவல்துறையினர் தேடி வருகின்றனர். புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சின்ன காலாப்பட்டு என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை டிப்டாப் உடை அணிந்த இளைஞர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அங்கும் இங்கும் பார்த்த நிலையில் அந்த இளைஞர் வாகனத்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காணாமல் போன “சிவன் கோவில்”… அதிர்ச்சியில் மதுரை மக்கள் ..!!

மதுரையில் பழங்கால கோவில் இருந்த இடம் தெரியாமல் அதன் மேல்  கட்டம் கட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  மதுரையில் பழங்காநத்தம் ரவுண்டானம்  அருகே குடியிருப்பு பகுதிகள் மற்றும்  ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு ஒரு கடையை அதன் உரிமையாளர் இடித்து விட்டு புதிதாக கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டார் . இதற்கிடையில்  அதன் அருகே கோயில் மண்டபம் போன்ற சுவடுகள்  காணப்பட்டதால் , இதுபற்றி தகவலறிந்த அப்பகுதி மக்களும், சிவனடியார்களும் அங்கு சென்று பார்த்தபோது பராமரிப்பில்லாத […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடன் அடைத்த பின்னும் வங்கி மேலாளர் குடைச்சல்… மனமுடைந்த விவசாயி விஷம் அருந்தி தற்கொலை..!!

கோவை இந்தியன் வங்கி வாசலிலேயே விவசாயி ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரையில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் பெரும்பான்மையான விவசாயிகள் கடன் தொல்லை காரணமாகவே விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்து வருகின்றனர். அதன்படி கோவை அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் விவசாயி ஆக இருந்தவர் பூபதி. இவரும் இவரது நண்பர்களும் சேர்ந்து பால் பண்ணை வைத்து தொழில் செய்யலாம் என்று […]

Categories
உலக செய்திகள்

தீக்கிரையான “தேவாலயம்” … சுமார் 27 கோடி ரூபாய் மதிப்பில் சேதம் ..!!

அமெரிக்காவில் வரலாற்றுப் புகழ் மிக்க கத்தோலிக்க தேவாலயம் ஒன்று இரண்டு தினங்களுக்கு முன்  தீக்கிரையானது .  அமெரிக்காவின் மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மெஸ்பேலியா என்ற இடத்தில்  1895 ஆம் ஆண்டு மரப்பலகையினால் இந்த தேவாலயமானது  கட்டப்பட்டது. இந்நிலையில், இந்த தேவாலயம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் திடீரென தீப்பற்றியது. பின்னர், வளாகம் முழுவதும் தீப்பற்றிய நிலையில் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் . இதனால் , சுமார் 27 கோடி ரூபாய் மதிப்புக்கு […]

Categories
மாநில செய்திகள்

“தடையை நீக்க கோரிக்கை” ஆறுமுக சாமி ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனு..!!

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு தடை விதிக்க கோரி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கிற்கு எதிராக ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதில், விசாரணைக்கு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தடை விதிக்க கூறுவதில் உள்நோக்கம் இருப்பதாகவும், அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் எதையோ மறைக்க நினைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணை தற்பொழுது தொய்வில்லாமல் சென்று கொண்டிருப்பதாகவும், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிரபல நடிகை திடீர் மாயம்… அதிர்ச்சியடைந்த படக்குழு நீதிமன்றத்தில் புகார்…!!

பொள்ளாச்சியில் நடிகை மாயமானது குறித்து சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் தொரட்டி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் நடிகையாக சத்யகலா என்பவர் நடித்து வந்தார். படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென தனது  தாய் தந்தைக்கு நான் நடிப்பது பிடிக்கவில்லை என்றும், எனக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்கள் என்றும் தயாரிப்பாளரிடம் தெரிவிக்க, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் பாதி படப்பிடிப்பு  நன்றாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“செல்போன் திருடிய திருநங்கை” … காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சி..!!

சென்னையில்  செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு திருநங்கைகள் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் கைது செய்யப்பட்டனர் .  சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியைச் சேர்ந்த தீபக்கோயல் என்பவர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.  இவரது மகள் தினமும் டியூஷன் சென்று வருவது வழக்கம். இதேபோல் கடந்த 26ம் தேதி டியூசன் சென்றுவிட்டு வந்த இவரது மகள் சாந்தி காலனி 5வது தெருவில் சென்ற போது இரண்டு திருநங்கைகள் மாணவியை மிரட்டி செல்போனை பறித்து அங்கிருந்து தப்பிச் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பரை கல்லால் அடித்துக்கொன்ற இளைஞர்… போலீஸ் வலைவீச்சு..!!

சென்னையில் குடிபோதையில் நண்பரை கல்லால் அடித்துக் கொன்ற இளைஞரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை  ராயப்பேட்டையில்  தேவசிகாமணி தெருவில் அடுக்குமாடி குடியிருப்புக்கான கட்டுமான பணி நடைபெற்று வருகின்றன.  அங்கு தங்கி வேலை பார்த்து வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த செல்வம் மற்றும் கடலூரைச் சேர்ந்த முல்லை நாதன் ஆகிய இருவரும் நண்பர்கள்  ஆகினார்கள் .  அந்நிலையில் இருவரும் மது அருந்திவிட்டு மதுபோதையில் சண்டையிட்ட போது ஆத்திரமடைந்த  முல்லை நாதன் செல்வத்தை கல்லால் அடித்துக் கொலை செய்து விட்டு  […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மருமகனை வெட்டிய மாமனார் … கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் விபரீதம்..!!

 சாயல்குடியில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால்  மருமகனை வெட்டி கொன்ற மாமனாரை காவல்துறையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம்  சாயல்குடியில்  சுயம்புலிங்கம் கோயில் தெருவைச் சேர்ந்த முனியாண்டி என்ற முனீஸ்வரன் பனை நொங்குகளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். இவர் தனது மாமனார் சிவலிங்கத்துக்கு அவ்வப்போது செலவுக்கு பணம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.   இந்நிலையில்,  கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி தனது மாமனாரிடம் முனிஸ்வரன் அடிக்கடி கேட்டதாகவும், ஆனால் சிவலிங்கம் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி […]

Categories
மாநில செய்திகள்

“இன்சூரன்ஸ்” பணத்திற்காக தாய், தந்தையை கொன்ற மகன்… ஆந்திராவில் பரபரப்பு..!!

ஆந்திராவில் இன்சூரன்ஸ் பணத்திற்காக தாய்,தந்தை கழுத்தை மகன் அறுத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலைச் சேர்ந்தவர் நாராயண ரெட்டி இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மதுவுக்கு அடிமையான நாராயண ரெட்டி தனது பெற்றோரிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மது அருந்தவும், வெளியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவும் தான் பணிபுரிந்து வந்த நிதி நிறுவனத்தின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“நாட்டு வெடிகுண்டு”தயாரித்த இளைஞர் கைது… விருதுநகரில் பரபரப்பு..!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த புதுப்பட்டி, இந்திரா காலனி பகுதியில் இன்று அதிகாலை 5 மணி அளவில் பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வத்ராயிருப்பு காவல்துறையினர் வீட்டினுள் இருந்த தங்கேஸ்வரன் என்ற 20 வயது இளைஞனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து வெடிகுண்டு தயாரிப்பதற்கான  மூலப் பொருட்களையும் பறிமுதல் […]

Categories
மதுரை மாநில செய்திகள்

மதுரை ரயில் நிலையத்தில் போதை பொருள் கடத்தல்… திடீர் சோதனையால் பயணிகள் பீதி..!!

தமிழக தென் மாவட்டங்களில் போதை பொருள் கடத்தப்படுவதாக வெளியான தகவலை அடுத்து மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மும்பையில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு சட்ட விரோதமாக  போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து மதுரை ரயில் நிலையத்தில் திடீரென ரயில்வே துறை காவலர்கள் மோப்ப நாயின்  உதவியுடன் மதுரை இரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.இச்சோதனையானது மதுரை ரயில் நிலைய காவல் ஆய்வாளர் முகேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில்  சுமார் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் குழந்தையின் தங்கச் செயின் பறிப்பு…..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் குழந்தையின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்து தப்ப முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். போரூரைச் சேர்ந்த ரம்யா என்பவர் தனது குழந்தையுடன் புதுக்கோட்டையில் இருந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தார். கூட்டம் அதிக அதிகமாக இருந்ததால் அருகில் அமர்ந்து இருந்த பெண்ணிடம் தன்னுடைய குழந்தையை கொடுத்துள்ளார். சற்று நேரத்தில் குழந்தையின் கழுத்தில் சங்கிலி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது அருகில்  இருந்த பெண் வேகமாக இறங்க முயற்சிப்பதைக் கண்டு அவரை […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

“பொள்ளாச்சி கொடூரம்”5 பேரின் காவல் நீட்டிப்பு… கோவை நீதிமன்றம்..!!

பொள்ளாச்சியில் பாலியல் கொடூரத்தை நிகழ்த்திய 5 பேரின் நீதிமன்ற காவலை கோவை நீதிமன்றம் நீட்டிப்பு செய்துள்ளது. பொள்ளாச்சியில் ஒரு பாலியல் கும்பல்  கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலித்து ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . இக்கும்பலை கைது செய்து பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சேலம்  சிறையில் அடைத்தனர்.   இந்நிலையில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருநாவுக்கரசு,சபரிராஜன், வசந்த பாபு,  […]

Categories
தேசிய செய்திகள்

நிரவ் மோடிக்கு அதிர்ச்சி…7200கோடியை வட்டியுடன் செலுத்த உத்தரவு..!!

மும்பை கடன் வசூல் தீர்ப்பாயம் 7 ,200 கோடி ரூபாயை   வட்டியோடு சேர்த்து  செலுத்தக் கோரி, நிரவ் மோடிக்கு  உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் தேசிய  வங்கி கிளையில் வைர வியாபாரியான  நிரவ் மோடி அவரது நண்பருடன் சேர்ந்து சட்டத்திற்கு புறம்பாக  சுமார் 14,000 கோடி பணத்தை பெற்று மோசடி செய்துள்ளநிலையில்,  மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடி மற்றும் அவரது நண்பர் மீது  சிபிஐ  வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு  விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்பாக, நிரவ் மோடி இங்கிலாந்துக்கும், அவரது நண்பர் பார்புடா நாட்டிற்கும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஊதுகுழலால் கணவனை கொன்ற மனைவி…திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

குடிபோதையில் தகாரறு  செய்த  கணவனை ஊதுகுழலால் தாக்கி  கொன்ற மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் பகுதியை சேர்ந்த    முருகேசன்      தனது   மனைவி    மற்றும்    4 குழந்தைகளுடன் கல்பட்டிசத்திரத்தையடுத்த  வத்தமணியகாரன்பட்டியில்  வசித்து வருகிறார். கல் உடைக்கும் தொழிலை செய்துவரும் முருகேசனுக்கு குடிப்பழக்கம் உண்டு .இதனால் கணவன் மனைவியிடையே  அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வர இவருக்கும் இவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. மேலும் போதை தலைக்கேறி தனது  […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆசிரியர் தாக்கி +2 மாணவன் படுகாயம்….குமரியில் பரபரப்பு..!!

கன்னியகுமாரியில் தனியார் பள்ளி ஆசிரியர் தாக்கியதால் படுகாயம் அடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலே பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு பாடத்திட்டத்தின் படி ஆசிரியர்கள் பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கல் அருகே தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறார் மாணவரின் ஜோசப் இவரை அப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் ஒருவர்  கடுமையாக தாக்கியதால் படுகாயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இச்சம்பவம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலி விமான டிக்கெட்…சீன இளைஞர்க்கு சிறை தண்டனை..!!

போலி விமான டிக்கெட்டை தயாரித்த சீன இளைஞரை காவல்துறைனர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . சீனாவைச் சேர்ந்த கலிஸூ  என்ற இளைஞர் சென்னை விமான நிலையத்தில் போலி டிக்கெட்டை  வைத்திருந்ததால் சந்தேகத்திற்கு   உட்பட்டு விமான நிலைய காவல் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதன் பின் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் , ஹாங்காங் செல்லவிருந்த தனது காதலிக்கு போலி விமான டிக்கெட் அவரே தயார் செய்ததாக தெரியவந்துள்ளது . போலி விமான டிக்கெட் தயார் செய்ததன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“இறப்பு சான்றிதழுக்கு 4,500 லஞ்சம் கேட்ட அதிகாரி கைது “லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ..!!

நாமக்கல்லில் இறப்பு சான்றிதழ் வழங்க ருபாய் 4,500 லஞ்சம் கேட்ட அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்துள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் என்னும் பகுதியில் சார்பதிவாளர் அலுவலக இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருபவர் காந்திமதி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் 1995ம் வருடம் இறந்த தங்கம்மாள் என்பவரின் இறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு ரூபாய் 4500 லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நபர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு […]

Categories

Tech |