வாக்குப்பதிவு கூடுதலாக இரண்டு மணிநேரம் நீடிக்கப்பட்ட மதுரை மக்களவை தொகுதி தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 38 மக்களவை தொகுதிகளுக்கும் , 18 சட்டமன்ற தொகுதிக்குமான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. தொடங்கிய முதலே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதாகியதாக வந்த புகாரையடுத்து சிறிது தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும் தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேர்தலில் மாலை […]
