புதுச்சேரியில் கல்வி நிறுவனங்கள் கல்விக்கட்டணம் செலுத்தும்படி பெற்றோர்களை நிர்பந்திக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டிற்கான கல்விக்கட்டணம், பேருந்துக் கட்டணத்தை செலுத்தும்படி கட்டாயப்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதை தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், அனைத்து அரசு அலுவலங்ககள், தனியார் நிறுவனங்கள், சிறு குறு தொழில்கள், வணிக வளாகங்கள், மால்கள் என அனைத்துமே மூடப்பட்டது. பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் மூடப்பட்டன. அரசு […]
