பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருப்பதால் பிரேசில் நாட்டில் தெருக்களில் குழி தோண்டி சடலங்களை புதைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை தீயாய் பரவி நாட்டையே புரட்டிப் போட்டுள்ளது. மேலும் நாளொன்றுக்கு அங்கு கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3001 கடந்துள்ளது. இதனால் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதால் மயானங்களில் சடலங்களை புதைப்பதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் அங்குள்ள தெருக்களில் சடலங்களை புதைக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் […]
