சாலை பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், ரயில்வே மேம்பாலம், பாதாள சாக்கடை திட்டம் ஆகிய மூன்று பணிகளும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்ட தோடு, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டிய இடங்களில் குழிகளை மூடாமல் பல தெருக்களில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. […]
