அரசு பள்ளியில் படித்து IIT, IIM போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 6-12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் செலவை அரசே ஏற்கும் என நிதிநிலை அறிக்கையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம் போன்ற புகழ்பெற்ற உயர் நிறுவனங்களில் […]
