யானை தந்தத்தினால் செய்யப்பட்ட சிற்பத்தின் பாகம் கிடைத்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் அருகில் மளிகை மேடு பகுதியில் தமிழக அரசு சார்பில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணியின்போது கடந்த மார்ச் மாதம் 4 ஆம் தேதி பழங்கால தங்கக்காப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பின் மார்ச் 25ஆம் தேதி மண்ணால் ஆன கெண்டி செம்பின் மூக்கு பகுதி, பழங்கால மண் பானை மற்றும் 22 அடுக்கு கொண்ட செங்கல் சுவரும் […]
